எளியோர் பாக்கியவான்கள்

"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" (மத்தேயு 5:3). ஏழ்மையான நிலையில் உள்ளோர் அநேகர்  இருக்கிறார்கள். பொதுவாக, நல்ல சிலாக்கியங்களைப் பெற்றவர்கள் ஏழைகளைக் காணக்கூடாது அல்லது கேட்கக்கூடாது என்று விரும்புகிறார்கள்;  பர்திமேயு ஏழையாகவும் பார்வையற்றவராகவும் இருந்ததால் கடலில் காணப்பட்ட பெருங்காற்று அலைகளிலும் அமைதியாக இருந்தான் (மாற்கு 10:48).

பொருளாதாரத்தில் ஏழ்மை:
ஆதரவற்றவர்கள், மிகவும் ஏழ்மையானவர்கள், விரக்தியானவர்கள் எனப் பலர் சில சமயங்களில் பட்டினியால் வாடுகின்றனர்.

ஆவிக்குரிய ஏழ்மை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள்; அவர்கள் மதத் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.  ஆண்டவராகிய இயேசு அவர்களை திருடர்கள் என்றும் கொள்ளையர்கள் என்றும் அழைத்தார்.  அவர்கள் வஞ்சகமாக அவர்களை வழிதவறச் செய்தார்கள் அல்லது அவர்களது வாழ்க்கையை வலுக்கட்டாயமாக சூறையாடினார்கள் (யோவான் 10:8,10).

மனதளவில் ஏழ்மை:
அநேகர் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கின்றனர்; அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.  எனவே, அவர்கள் மற்றவர்களுக்குச் செவிசாய்க்கிறார்கள், ஆனால் அவர்களோ சரியான பாதையில் வழிநடத்த மாட்டார்கள். சாத்தானால் ஏற்படும் மனக் குருட்டுத்தன்மையால் பலர் சத்தியத்தை இழக்கிறார்கள் (2 கொரிந்தியர் 4:4).

சரீரளவில் ஏழ்மை:
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். சிலர் ஊனமுற்றவர்களாகவும் அல்லது சரீரத்தில் பாதிப்பு உள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உளவியல் ரீதியாக ஏழ்மை:
சிலருக்கு தங்களைப் பற்றி சிறந்த எண்ணமோ அல்லது மரியாதையோ  இல்லாதவர்கள்.  உண்மையைச் சொல்லப் போனால், அவர்களால் தங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவர்களின் கற்பனையில் தாங்கள் அழகாக இல்லை அல்லது தோற்றம் சரியில்லை அல்லது தாங்கள் மிகவும்  ஏழை;  அறிவில்லை;  திறமை இல்லை;  நண்பர்கள் இல்லை;  வளங்கள் இல்லை;  உதவி செய்ய யாரும் இல்லை என இப்படி எதிர்மறை சிந்தனையாகவே இருப்பார்கள். அதுமட்டுமல்ல தங்களால் யாருக்கு என்ன பயன்? தாங்கள்  பயனற்றவர்கள், இந்த உலகத்திற்கு தேவையற்றவர்கள் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

உணர்ச்சியில் ஏழ்மை:
இந்த மக்கள் எப்போதும் சோகமாகவும், மனச்சோர்வுடனும், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள்.  அவர்களுக்கு இழப்பின் உணர்வு உள்ளது, ஆனால் அவர்களின் இழப்பு என்ன என்பதை அறிய முடியவில்லை.  மகிழ்ச்சியும் சமாதானமும் அவர்களின் வாழ்க்கையில் இல்லாத விஷயமாக காணப்படுகிறது.

சமூக ஏழ்மை:
நண்பர்கள், தொடர்புகள் மற்றும் உதவுவோர் இன்றி சமுதாயத்தில் உள்ளவர்கள், அவர்களை கீழ் சாதியினரைப் போல படிநிலையின் கீழ் நிலையில் வைக்கின்றனர். ஆகையால் கீழ் படிநிலையில், அவர்களுக்கு உதவக்கூடிய நண்பர்கள் அல்லது நபர்கள் குறைவு.

அரசியல் ஏழ்மை:
ஒரு நாட்டில் குடியுரிமை அந்தஸ்து இல்லாதவர்கள்.  அவர்கள் அகதிகளாக இருக்கலாம் மற்றும் அடிமைகளாக அல்லது ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களாக வாழலாம்.  இன்னும் சிலர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.

தேவன் எளியோருக்கு கண்ணியத்தை வழங்குகிறார்.

 பரலோக ஆஸ்திக்கு நான் நன்றியுள்ள நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download