ஜெபத்தில் விழிப்புடன் இருங்கள்

ஒருவர் ஜெபிக்கத் தொடங்கும் போதெல்லாம் தூக்கம் வந்துவிடுவதைக் குறித்து மிகவும் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் "அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்" (சங்கீதம் 127:3) என்று சங்கீதத்தை வேறு மேற்கோள் காட்டினார்.  எனவே, தான் கர்த்தருக்குப் பிரியமானவன் என்றும் கூறிக்கொண்டார்.  துரதிர்ஷ்டவசமாக, அவருக்கு ஜெபத்தைப் பற்றிய புரிதலும் இல்லை, தூக்கத்தைப் பற்றிய புரிதலும் இல்லை.

கெத்செமனே தோட்டம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில் ஜெபத்தின் முக்கியத்துவத்தை உதாரணத்தின் மூலம் நிரூபித்தார்.  கெத்செமனே தோட்டத்தில் ஒரு சிறப்பு ஜெப விழிப்பூட்டலுக்கு அவர் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை அழைத்தார்.  இருப்பினும், மூவரும் தூங்கிவிட்டனர், ஒரு மணிநேரம் கூட விழித்திருந்து அவர்களால் ஜெபிக்க முடியவில்லை; கர்த்தர் அவர்களைக் கடிந்துகொண்டார் (மத்தேயு 26:40).

தூங்கும் சீஷர்கள்:
மனிதர்கள் தூங்குவது இயற்கை.  இருப்பினும், அசாதாரண காலங்களில், மக்கள் எழுந்து சில பணிகளைச் செய்கிறார்கள்.  சில முக்கியமான பணிகளை எதிர்கொள்ளும்போது, அச்சமயங்களில் தூக்கத்தை தியாகம் செய்து, ஊக்கமாகவும் ஆர்வமாகவும் ஜெபிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.  சீஷர்கள் சரித்திர நிகழ்வைப் புரிந்துகொண்டு அதற்கு ஆவிக்குரிய ரீதியில் தயாராக வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்த்தார்.  ஆனால் சீஷர்கள் அதில் மிக மோசமாக தோல்வியடைந்தனர்.

விருப்பமா அல்லது பலவீனமா:
"ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது" (மத்தேயு 26:41). ஆவிக்குரிய உலகில் உள்ள சவால்களை சரீரத்தால் சமாளிப்பது என்பது கடினம்.

சரீரத்தை ஒழுங்குபடுத்து:
எனவே, சரீரத்தை ஒழுங்குபடுத்தி ஆவியின் கீழ்ப்படிதலின் கீழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.  ஒரு நபர் சரீரத்தைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், இயக்கவும் முடியும்.  உணர்வுகளை அல்லது பிற பாவப் பழக்கங்களால் அது கையாளப்படக்கூடாது.  ஒரு விளையாட்டு வீரரைப் போல தனது சரீரத்தை ஒடுக்கி ஒழுங்குபடுத்துவதாக பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 9:27).

முன்னுரிமை:
ஜெபம் என்பது சரீரத்திற்கு சுவாசம் போன்ற அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.  வேதாகமத்திலும், திருச்சபையின் வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ள பெரிய காரியங்களைச் செய்த தலைவர்கள் எல்லாம் தம்முடைய மக்களுக்காக  செவிசாய்த்து, பதிலளிக்கும், எதிலும் தலையிடும் மற்றும் அற்புதங்களைச் செய்யும் தேவனை நம்பியவர்கள்.  சீஷர்கள் ஜெபத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தால், அவர்கள் நிச்சயமாக ஜெபங்களுக்கு முன்னுரிமை / முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தோல்வி இறுதியானது அல்ல:
நினிவே நகரில் ஊழியம் செய்ய யோனா அழைக்கப்பட்டார். ஒருவேளை அவர் ஜெபிப்பதை நிறுத்திவிட்டு, தேவ சித்தம், நோக்கம் மற்றும் சமூகத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.  ஆனால் பின்பதாக அவர் மீனின் வயிற்றில் இருந்து ஜெபம் செய்தார், தேவன் அவருடைய ஜெபங்களுக்கு பதிலளித்தார்.

  ஜெபம் என்னும் ஆவிக்குரிய ஒழுக்கம் என்னிடம் உள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download