தேவதூதன்‌ தரிசனம்‌

காலைக் கதிரவன் தன் பொற்கரங்களை விரித்தபடி மெல்ல மெல்ல எழுந்தான். கிழக்கே கிதரோன் பள்ளத்தாக்கும், மேற்கே இன்னோம் பள்ளத்தாக்கும், லாட வடிவமாக வளைந்து நிற்க நடுவில் எழுந்து நின்ற மலையின் மீது கம்பீரமாக காட்சியளித்தது. எருசலேம் பட்டினம். அப்பட்டினத்தினுள் கிழக்குப் பகுதியில் பளிங்கு கற்களினாலும், பொன்னினாலும் கட்டப்பட்டிருந்த தேவாலயம் தகதகவென மின்னியது. புனித அகத்தில் (சன்னிதானம்) பணிபுரியும் ஆசாரியரும் அவருக்கு உதவியாக ஆலயப் பணிபுரியும் லேவியரும், பலி செலுத்த வந்த மக்களும், ஆலய வளாகத்தினுள் பலிப் பொருளை விற்பனை செய்யும் வணிகர்களும் நிறைந்து ஆலயம் தமக்கே உரித்தான கலகலப்போடு விளங்கியது.

பலி செலுத்திவிட்டு வந்த சீமோன் ஆலயத்தினுள்ளே தூணை ஒட்டிய ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்திருந்த பெரியவரைப் பார்த்தான். பஞ்சு போன்ற தலைமுடியும், மீசையும், தாடியும் கொண்ட அவர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அவரது கேசத்தைப் போன்றே அவர் உள்ளமும் தூய்மையும், இறைபக்தியும், கொண்டது என்பதை அவரது பரிசுத்தமான முகம் காட்டியது. அவர்தான் சிமியோன். ஸ்தோத்திரம் தாத்தா” கரம் குவித்தான் சீமோன். மெல்லக் கண்களைத் திறந்தவர்,

வாப்பா சீமோன்! நலந்தானா?

நலந்தான் தாத்தா. சிற்றப்பாவின் பெண் மரியாளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதுதான் ஸ்தோத்திர பலி செலுத்திவிட்டுப்போகலாம் என்று வந்தேன்" அப்படியா? ரொம்ப சந்தோஷம். பிள்ளையாண்டன் யார்?” யாக்கோபு... அவர்களுடைய மகன் யோசேப்பு, தச்சு வேலை பார்க்கிறார். நல்ல குணம்'' ௭ன்றவன் சிமியோன் தாத்தாவைப் பார்த்தான்.

குயில் குழந்தையை ஏந்தியபடி வரும் தம்பதியினரை உற்று நோக்கிய தாத்தா. ஒரு சில மணித்துளி கிழித்து, தன் நிலைக்கு வந்தார். ஏமாற்றம் அவர் விழிகளில் தெரிந்தது. அதைக் கவனித்த சீமோன், ''தாத்தா வெகுநாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். உங்களிடம் கேட்கலாமா?'' என்றான்.

“என்ன மகனே?”

“கைக் குழந்தையோடு வரும் தம்பதியினரை தாங்கள் ஆவலோடு பார்ப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன். யாரையோ நீங்கள் எதிர் பார்ப்பது போல் எனக்குத் தெரிகிறது”.

“ஆம் மகனே! நம்மை மீட்க வரும் மேசியாவை எதிர்பார்த்தே இந்த ஆலயத்தினுள் காலத்தைக் கடத்துகிறேன். ':கிறிஸ்துவைக் காணும் முன் நீ மரணமடைய மாட்டாய்'' என கடவுள் எனக்குத் திருவுளம் பற்றியிருக்கிறாரப்பா!:'.

“மேசியா வருவார்! என்று அநேகர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அவர் வந்தால் ரோமர்கள் ஆட்டியினின்று நம்மை மீட்பாரா தாத்தா?'.

“நீ கூறுவதைக் காட்டிலும் அதிக மேன்மையான காரியம் நடக்கும் என நம்புகிறேன்... அங்கு பார்த்தாயா?!” அவர் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தான் சீமோன். அங்கு வெண்ணிற ஆடையில் தூய்மையே உருவாக ஒரு முதிய பெண்மணி அமர்ந்திருந்தார்.

“அந்த அம்மாள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் குமாரத்தி பெயர் அன்னாள். ஒரு தீர்க்கதரிசி 7 ஆண்டுகளே கணவனோடு வாழ்ந்தவள். தற்சமயம் 84 ஆண்டுகள் நிரம்பிய அந்த விதவை, இரவும் பகலும் இந்த ஆலயத்திலேயே தங்கி தேவனை ஆராதித்து வருகிறார். அவரும் “மேசியா சீக்கிரம் வரப்போகிறார்” என்றுதான் தீர்க்கதரிசனம். கூறுகிறார்'' என சிமியோன் கூற, அவரிடம் விடை பெற்றுச் சென்றான் சீமோன். 

புனித அகத்தினுள் தூபம் காட்டச் சென்றார் ஆசாரியர் சகரியா, தூபபீடத்தின் வலது பக்கத்திலே தூதுன் காட்சியளித்தார். சகரியாவின் உடல் நடுங்கியது. தூதன்,

“சகரியாவே! பயப்படாதே! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரணைப் பெறுவாள். அவனுக்கு யோவான் எனப் பெயரிடுவாயாக. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சரசமும் மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேலரில் அநேகரை கடவுளிடத்திற்குத் திருப்புவான்'” என்று கூற சகரியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. தனது ஐயத்தை மெல்ல வெளியிட்டார்.

“நானோ கிழவன். என் மனைவியும் வயது சென்றவள்'!

“நான் தேவனிடத்திலிருந்து வந்த காபிரியேல் தூதன். என் வார்த்தைகளை நீ நம்பாமற் போனபடியால் குழந்தை பிறக்கும் வரை நீ ஊமையாயிருப்பாய்'' என்று கூறிய தேவதூதன் மறைந்தார்.

சகரியா வெளியே வந்தார் பேச முடியவில்லை தன் வீட்டிற்குச் சென்றார். '*தனக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான். அவன் மிகச் சிறந்தவனாயிருப்பான்' என்று எண்ணும்போது அவர் உள்ளத்தில் சந்தோஷம் பொங்கி வழிந்தது. இச்செய்தியை நம்பாமற் போனதால் ஊமையாயிருக்கிறோமே என்று எண்ணியபோது அவருக்கு வெட்கமாகவும் இருந்தது.

திங்கள் ஓடி மறைந்தன.

இதன் தொடர்ச்சி வசந்த கால நினைவுகள்...  என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Udhaya Thaaragai - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download