உடன்படிக்கை உறவு

தேவனின் சிறப்புப் பண்புகளில் ஒன்று; உடன்படிக்கையால் முத்திரையிடப்பட்ட அவரது உறவு. தேவன் தனது ஜனங்களிடமிருந்து பின்வரும் பிரதியுத்ரங்களை எதிர்பார்க்கிறார் (2 இராஜாக்கள் 17:35-40). "பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்" (சங்கீதம் 50:5). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையுள்ளவர்கள்.  அவர்கள் அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலம் பிதாவாகிய தேவனோடு ஒரு உடன்படிக்கை செய்தார்கள்.

1) தேவனுக்குப் பயப்படுதல்:
தேவ ஜனங்கள் இறையாண்மையுள்ள யெகோவாவுக்கு அஞ்ச வேண்டும், அவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர் வானத்திற்கும் பூமிக்குமான நித்திய தேவனவர். வேறு எந்த பொய்யான தெய்வங்களுக்கோ அல்லது அவர்களின் பிரதிநிதித்துவங்களுக்கோ தேவ ஜனங்கள் அஞ்ச தேவையில்லை. 

2) தேவனை ஆராதித்தல்:
"கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்" (சங்கீதம் 29:2; 96:9; யோவான் 4:24). 

3) தேவனுக்கு ஊழியம் செய்தல்:
மக்கள் உறுதியான அன்பிலும், மகிழ்ச்சியிலும், கீழ்ப்படிதலிலும் தேவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.  தேவ ஜனங்கள் மகிழ்ச்சியுடனும் களிப்புடனும் கர்த்தருக்குச் சேவை செய்யாவிட்டால், அவர்கள் "சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்" (உபாகமம் 28:47-48). 

4) தேவனுக்கு பலி செலுத்துதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உன்னதமான பலிக்கு முன்பதாக அனைத்து பலிகளும் முடிவடையும் வரை, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தேவனுக்கு பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட பலிகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனாலும், பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் என்று சாமுவேல் கற்பித்தார் (1 சாமுவேல் 15:22). "உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்" என்பது புதிய ஏற்பாடு நமக்கு சொல்லித் தருகிறது (எபிரெயர் 13:15). 

 5) தேவ நியமனங்களுக்கு கீழ்ப்படிதல்:
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும், குறிப்பாக பத்துக் கட்டளைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் தேவனுக்கு கீழ்ப்படியும்படி அறிவுறுத்தப்பட்டனர் (யாத்திராகமம் 20:2-27).

6) தேவ செயல்களை மறவாதிருத்தல்:
மறதி என்பது பொதுவாக மனித இயல்பு, குறிப்பாக தேவ செயல்கள் உட்பட நல்ல விஷயங்களை அனைவரும் மறந்து விடுகிறார்கள்.  ஆண்டவரிடமிருந்து பெற்ற அனைத்து ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் மறந்துவிடாமல் தாவீது தனது ஆத்துமாவிடம் பேசுகிறான். ஆம், "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங்கீதம் 103:2). 

7) தேவ உடன்படிக்கையை மறந்துவிடாதிருத்தல்:
தேவனுடைய ஜனங்கள் கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மறந்துவிடக்கூடாது. இத்தகைய மறதியால் தேவனுடனான அடையாளமும், கண்ணியமும், உறவையும் இழக்க நேரிடும்.

 கர்த்தருடனான பரிசுத்த உடன்படிக்கைக்கு நான் உண்மையுள்ளவனா? சிந்திப்போமா. 
 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download