தேவனின் உண்மையான ஊழியர்

தேவன் லேவி கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் உடன்படிக்கை செய்தார்.  அவர்கள் சிரத்தையுடன் தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  மல்கியா தீர்க்கதரிசி அவர்களிடம் தேவனின் எதிர்பார்ப்பைப் பற்றியும், தேவனின் தேவைகளை அவர்கள் எவ்வாறு இழந்தார்கள் என்பதையும் எழுதுகிறார் (மல்கியா 2:6-8). தேவனுடைய எல்லா மக்களும் இந்தப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  துரதிர்ஷ்டவசமாக, ஆவிக்குரிய காயங்களுக்கு கடுமையான அறுவை சிகிச்சை தேவைப்படும்போது, பீடத்தில் நிற்கும் ஊழியர்கள் கலைஞர்களைப் போல பொழுதுபோக்குபவர்களாகவும் மக்களை மகிழ்விப்பவர்களாகவும் காணப்படுகிறார்கள் (எரேமியா 6:14; 8:11).

 உண்மையான அறிவுரை:
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சத்தியம்;  அவருடைய வார்த்தைகள் சத்தியம் மற்றும் அவரை தொழுது கொள்பவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.  அப்போஸ்தலர்கள், மிஷனரிகள், போதகர்கள், ஆசிரியர்கள், சுவிசேஷகர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் பிறர் சத்தியத்தின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்பட எதிர்பார்க்கப்படுகிறார்கள்.  அவர்களின் போதனையில் ஒரு துளியளவு பொய்யின் சுவடு கூட இருக்கக்கூடாது.

 சமாதானம்:
 தேவ பிள்ளைகள் சமாதானம் செய்பவர்களாகவும் சமாதானத்தை அறிவிக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.  அவர்கள் நுழையும் வீடுகளில் ஷாலோம் (சமாதானம்) என்று உச்சரிக்குமாறு சீஷர்களுக்கு கர்த்தராகிய ஆண்டவர் அறிவுறுத்தினார். "அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது" (மத்தேயு 10:13).  

நீதியின் பாதை:
கர்த்தருடைய நாமத்தைத் தாங்கியவர்கள் நீதி, பரிசுத்தம் மற்றும் சத்தியத்தின் பாதைகளில் நடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேவன் தம்முடைய நாமத்தினிமித்தம் தன்னை நீதியின் பாதைகளில் நடத்தும்படி தாவீது ஜெபித்தார் அல்லவா.

 தேவ ஞானம்:
 மந்தையை மேய்ப்பவர்களாக, அவர்கள் அறிவைக் காக்க வேண்டும்.   தேவனைப் பற்றி அறிய வேண்டுமென்றால் அவருடைய எதிர்பார்ப்புகள், அவருடைய பிரமாணங்கள், அவருடைய சித்தம் மற்றும் அவருடைய நோக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.  இவை அனைத்தும் சீஷர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.  இந்த அறிவுக் கருவூலம் மறைக்கப்படவோ அல்லது சிதைக்கப்படவோ கூடாது.  இந்த அறிவு சரியான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது.

 மக்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்:
 முறையான போதனையின் மூலம் மக்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள்.  எனவே, போதகர்களிடமிருந்து / ஊழியர்களிடமிருந்து ஞானத்தைத் தேட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.  வழிதவறிச் செல்லும்போது அவர்களுக்கும் கடிந்து கொள்ளுதல் வேண்டும். பெரோயா யூதர்கள் சான்றோர், ஆம், அவர்கள் வேதத்திலிருந்து ஞானத்தைத் தேடினார்கள் (அப்போஸ்தலர் 17:11).

 தேவ தூதர்:
 தேவனின் தூதர்களாக, கிறிஸ்தவ தலைவர்கள் மனந்திரும்புதல், பாவம் மற்றும் தவறான போதனைகளுக்கு எதிராக எச்சரித்தல், நன்மை செய்ய ஊக்குவித்தல், நீதியைக் கொண்டுவருதல், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கான அதிகாரம் மற்றும் நித்திய நம்பிக்கையை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்க வேண்டும்.  உண்மையில், அனைத்து விசுவாசிகளும் உலகில் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

 என் வாழ்க்கை தேவனிடமிருந்து உலகுக்கு அனுப்பிய செய்தியா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download