பரலோகத்திற்கும் நரகத்திற்கும் அடிக்கடி பறப்பவரா?

விமான நிறுவனங்கள் தங்கள் வேலை அல்லது வணிகத்திற்காக ஒரே பாதையில் அடிக்கடி பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன.

சுய பாணி தீர்க்கதரிசி:
ஒரு தீர்க்கதரிசி 120 நிமிடம் நல்ல ஒரு மத பொழுதுபோக்கை நிகழ்த்தினார். அதாவது அவர் 30 முறை நரகத்திற்குச் சென்றதாகக் கூறினார்; பரலோகத்திற்கு சென்றதாகவும் கூறினார் ஆனால் அது கொஞ்சம் குறைவான நேரங்களே.  நரகத்தில், அவர் 142 வகையான சித்திரவதைகளைக் கண்டதாக கூறினார்.  ஒரு திருடன் நரகத்தில் தண்டிக்கப்படும் விதத்தைக் கூறினார், அவனது கைகள் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவனது தோல் உரிக்கப்பட்டு, உப்பு வைத்து தேய்க்கப்பட்டதாகவும் கூறினார்.  அநேகமாக, அவர் நரகத்தில் வரைகலையை பார்த்தாரோ என்னவோ, அதில் வெப்பநிலை 50000 டிகிரி சென்டிகிரேட் என காட்டிருக்கலாம்.  மேலும், தன்னை ஹாக்கி ஸ்டிக் மூலம் தாக்கியதால், இறந்து விட்டதாகவும், பிணவறையில் வைத்து அடைத்ததாகவும் கூறினார்.

 ஆடம்பர வாழ்க்கை முறை:
 கல்லறையிலிருந்து லாசருவை எழுப்பினது போல கர்த்தராகிய இயேசு தன்னை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று அவர் கூறினார்.  அவர் மிகவும் கஷ்டப்பட்டதால், அவர் சாதாரண சட்டைகளை அணியாமல், தரமிக்க சட்டைகளை அணிந்து இருந்ததாகவும், விமானத்தில் மட்டுமே பயணம் செய்தார் எனவும், மேலும் ஒரு தனிப்பட்ட விமானத்திற்காக  வேண்டிக் கொண்டிருந்தாகவும் கூறினார்.

 நோக்கமற்ற பிரசங்கம்:
 அவர் ஒரு இளைஞர் மாநாட்டில் பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டார், அங்கு அவர் எந்த நோக்கமும் அல்லது கருத்தும் இல்லாமல் பிரசங்கம் செய்தார். "நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்" (1 கொரிந்தியர் 9:26) என்பதாக பவுல் எழுதுகிறார். ஆம், அப்படிப்பட்ட தற்பெருமை எந்த நோக்கத்தையும் அளிக்காது (2 கொரிந்தியர் 12:1) அல்லவா. 

 சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கியுங்கள்:
தேவன் தம் மக்களை தம்முடைய சாட்சியாக இருப்பதற்கும், கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதற்கும், வார்த்தைகளாலும் செயல்களாலும் நற்செய்தியை அறிவிக்கவும் அழைத்துள்ளார்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் துன்பமும் மரணமும், மனிதகுலத்தின் மீட்பிற்காக அவர் தனது இரத்தத்தை சிந்தினார் என்பது அனைத்து பிரசங்கங்களுக்கும் போதனைகளுக்கும் மையமானது.  பிரசங்கியார் துன்பத்தில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.  பவுல் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்  (2 கொரிந்தியர் 1:23).

 பரலோகத்தைப் பிரசங்கியுங்கள்:
 ஆம், வேதாகமம் நித்தியத்தைப் பற்றி குறிப்பாக பரலோகம் பற்றி பல விஷயங்களைக் கற்பிக்கிறது,.  கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இந்த உலகத்தில் அந்நியர்களாகவும் பரதேசிகளாகவும் கூடாரங்களில் வசிக்கும் போது தேவனால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நகரத்தைப் பார்த்தார்கள் (எபிரெயர் 11:9-10; வெளிப்படுத்துதல் 21).

 தேவ பயம்:
 தேவனுக்குப் பயப்படுவதை மக்களுக்குக் கற்பிப்பது இன்றியமையாதது, ஏனென்றால் அது ஞானத்தின் ஆரம்பம்.  இருப்பினும், நரகத்தைப் பற்றி பயமுறுத்தும் கற்பனைகளுடன் பிரசங்கிப்பது பிரசங்கத்தின் குறிக்கோள் அல்ல.

 நான் சுய பாணி தீர்க்கதரிசிகளை குறித்து எச்சரிக்கையாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download