கொடுத்தலில் ஒரு தெய்வீகம்

தங்கள் காணிக்கையை காணிக்கைப் பெட்டியிலே போடும் மக்களை கர்த்தராகிய ஆண்டவர் கவனித்தார் (லூக்கா 21:1-4).

பிரமாண்ட நிகழ்ச்சி:
ஒரு நீண்ட வரிசை இருந்திருக்கலாம்.  பணக்காரர்கள் தங்கள் பெருமையையும் தேவபக்தியையும் வெளிப்படுத்தினர்.  இருப்பினும், ஆண்டவர் ஒரு வித்தியாசமான நபரைப் பார்க்கிறார், அங்கு நின்ற ஒரு ஏழை விதவை இரண்டு காசைப் போடுகிறாள்.  ஒரு காசு என்பது ஒரு தொழிலாளியின் ஒரு நாள் ஊதியத்தில் ஒரு சதவீதம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக அவளிடம் இரண்டு காசுகள் மட்டுமே இருந்தன, ஒன்றை தனக்காக வைத்துக் கொள்ள நினைக்கவில்லை, தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தாள்.

கொடுத்தலில் தாராளம்:
ஏழை விதவை அவர்களில் எவரையும் விட அதாவது மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடுத்தார் என்று ஆண்டவர் கூறினார். அதாவது, அவளுடைய காணிக்கை எல்லா ஐசுவரியமான காணிக்கைகளையும் விட விலையேறப்பெற்றது. ஆண்டவர் காணிக்கையின் மூலத்தைச் சுட்டிக் காட்டினார்.  ஏழை விதவையைத் தவிர அனைவரும் மிகுதியாகக் கொடுத்தார்கள் என்பது உண்மை தான்.  இருப்பினும், அவள் வறுமையிலிருந்து கொடுத்தாள் என்பது அல்லவா மாபெரும் விஷயம். காணிக்கை கொடுப்பவரின் மனப்பாங்கை வைத்து தேவன் அதை மதிக்கிறார், அங்கீகரிக்கிறார்.

வன்ம பணம்:
வன்மமாக கொடுப்பவர்கள் பலர்.  இது அரசாங்கத்திற்கு நியாயமற்ற வரி செலுத்துவது போன்றது.

குற்றப்பணம்:
சிலர் பணக்காரர்கள், அவர்களின் வருமானம் முறையான வழிகளில் வருவதில்லை.  ஒழுக்கக்கேடான வருமானம், சுரண்டப்படும் வருமானம் மற்றும் அடக்குமுறை மூலம் வருமானம் என இருக்கலாம்.  ஒரு பகுதியை காணிக்கையாகக் கொடுப்பதன் மூலம், தேவனும் சாந்தப்படுத்தப்பட்டு சமாதானப்படுத்தப்படுவார் என்று நினைத்து, தங்கள் குற்றமுள்ள மனசாட்சியை சமாதானப்படுத்த முட்டாள்தனமாக முயற்சி செய்கிறார்கள்.

நல்ல முதலீட்டு பணம்:
தன்னுடைய ஊழியத்திற்காக மக்கள் எதைக் கொடுத்தாலும், தேவன் ஆயிரம் மடங்கு திருப்பித் தருவார் என்று ஒரு பிரசங்கியார் அறிவித்தார்.  இது குறைந்த முதலீடு மற்றும் அதிக ஈவுத்தொகை ஒப்பந்தம் போலல்லவா இருக்கிறது.

 நன்றி செலுத்தும் பணம்:
 அந்த ஏழை விதவை, தன்னிடம் இருந்த இரண்டு காசுகள் கூட தேவனின் கிருபை, அது அவருக்கு உரியது என்ற உண்மையை உணர்ந்தாள்.  எனவே, அவள் மகிழ்ச்சியுடன் அனைத்தையும் கொடுத்தாள்.  தாவீதைப் போலவே காணிக்கை அளித்தாள்; ஆம், தனக்குச் செலவு செய்யாமல் வீணாக போவதை காணிக்கையாக கொடுப்போம் என்பது போலல்லாமல் தன் ஜீவனுக்கானதையே கொடுத்தாள்  (2 சாமுவேல் 24:24).

மகிழ்ச்சியான உள்ளம்:
ஏழை விதவையைப் போல மகிழ்ச்சியுடன் கொடுப்பவரை தேவன் நேசிக்கிறார் (2 கொரிந்தியர் 9:7). அவளுடைய காணிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கது மற்றும் மதிப்புமிக்கது என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை.

மிகப் பெரிய பாராட்டு:
ஏழை விதவையின் கொடுத்தலை ஆண்டவர் பாராட்டினார்.  இழப்பீடு எதுவும் தரவில்லை. ஆனால் நிச்சயம் ஏழை விதவைக்கு தேவனிடத்தில் நித்திய பலன் உண்டு.

 நானும் எனக்கான எல்லாமும் கர்த்தருக்கு உரியது என்ற உணர்வுள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download