ஆபத்தான திருமண பந்தம்

தீமோத்தேயுவின் பெற்றோர்  வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்,  அவனது தாயார் ஒரு யூதர் மற்றும் அவனது தந்தை ஒரு கிரேக்கர்.  இருப்பினும், வேதத்தில் அறிவுறுத்தப்பட்டபடி தீமோத்தேயு ஒரு யூதராக வளர்க்கப்பட்டான்.  அவனது தாயார் ஐனிக்கேயாள் மற்றும் பாட்டி லோவிசாளும் தீமோத்தேயுவுக்கு வேதத்தை நன்கு கற்றுக் கொடுத்தனர் (2 தீமோத்தேயு 1:5). மாறாக, சாலொமோன் தன் மனைவிகளால் தவறாக வழிநடத்தப்பட்டான், அவன் கர்த்தரை விட்டு விலகினான்.  ஆம், தேவ சித்தத்திற்கு எதிரான திருமணம் ஆபத்தையும், பேரழிவையும், மரணத்தையும் கூட கொண்டுவருகிறது.  யோசபாத் தாவீதைப் போல கர்த்தரைப் பின்பற்றினான், ஆனால் தனது மகனின் திருமணத்தில், சாலொமோனை அல்லவா பின்பற்றினான் (2 நாளாகமம் 17:3; 1 இராஜாக்கள் 11:4). யோசபாத்தின் மகன் யோராமுக்கும் ஆகாபின் மகள் அத்தாலியாவுக்கும் நடந்த திருமணம் ஒரு பெரிய தவறு (2 நாளாகமம் 21:6). ஆவிக்குரிய பகுத்தறிவு இன்றியமையாதது மற்றும் மனித அறிவை விட அதிகமாக மதிக்கப்பட வேண்டும்.

ஒற்றுமை மற்றும் அமைதி:
பிளவுபட்ட ராஜ்யம் ஒரே ராஜ்ஜியமாக மாறி நிம்மதியாக வாழ வேண்டும் என்று யோசபாத் நினைத்தான்.  இருப்பினும், பிரிவு தேவனிடமிருந்து அல்லவா வந்தது.  சாலொமோனின் மகன் ரெகொபெயாம், பத்து கோத்திரங்களின் ராஜாவான யெரொபெயாமிற்கு எதிராகப் போரிடத் தடை விதிக்கப்பட்டான் (1 இராஜாக்கள் 12:24). மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய பரம்பரை மற்றும் ஒரே மாதிரியான பூர்வீக வம்சாவளியைக் கொண்ட இரண்டு ராஜ்யங்களும் ஒப்புரவாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.  எனவே, ஆகாபைப் போலவே அவனுடைய மக்கள் இருப்பார்கள் என்று ஆகாபிடம் கூறினார் (1 இராஜாக்கள் 22:4).

செல்வாக்கு:
யோசபாத் தன் மகன் தங்கள் முன்னோர் தாவீதைப் போல கர்த்தரைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பான் என நம்பிக்கை வைத்திருந்தான்,  யோராம் கர்த்தரைப் பின்பற்றியது மட்டுமின்றி, அவனது மனைவி அத்தாலியாவையும், ஆகாபின் முழு குடும்பத்தினரையும் ஈர்ப்பான் என யோசபாத் நினைத்தான்.  ஆம், தேவபக்தியுள்ள ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையை சரியான திசையில் வழி நடத்தினார்கள்.  துரதிர்ஷ்டவசமாக, பல தெய்வீக ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணைகளால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

பேரழிவு:
ஏதோம் மற்றும் லீப்னா பட்டணத்தின் கலகம் மற்றும் எலியா தீர்க்கதரிசியின்  மூலம் தேவன் அவனை எச்சரித்தார் (2 நாளாகமம் 21:8,11,14-15). அவனுடைய மரணம் பரிதாபமானது, அவனுடைய மகன் அகசியா சிறிது காலம் ஆட்சி செய்து யெகூவால் கொல்லப்பட்டான்.  மேசியா இந்த உலகத்திற்கு வராதபடி தாவீதின் சந்ததியினரை அழித்தொழிக்க சாத்தான் எண்ணினான்.  எனவே, அவன் அனைத்து ஆண் சந்ததியினரையும் கொல்ல அத்தாலியாவைப் பயன்படுத்தினான், ஆனால் தேவன் அகசியாவின் குழந்தையான யோவாசைப் பாதுகாத்தார்.

ஆவிக்குரிய பகுத்தறிவால் நான் பேரழிவை வேறுபக்கமாக திருப்புகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download