கோணல்மாணலான இதயமும் கோணல்மாணலான அண்டை வீட்டாரும்!

தந்தை, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் திரியேக தேவன்   அன்பின் பண்பை வெளிப்படுத்துகிறார்கள்.  தேவன் அன்பானவர், நாம் அவரை நேசிப்பதற்கு முன்பாகவே அவர் நம்மை நேசித்தார்;  அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். தேவனின் அன்பு பரிசுத்த ஆவியால் நம் இதயங்களில் ஊற்றப்படுகிறது (1 யோவான் 4:16; யோவான் 3:16; ரோமர் 5:5). தம்மைப் பின்பற்றுபவர்கள் தங்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்கும்படி தேவன் கட்டளையிட்டுள்ளார், இது ராஜரீக பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது (மாற்கு 12:31). கவிஞர் டபிள்யூ.எச்.  ஆடன் என்பவர்; “உங்கள் கோணல்மாணலான அண்டை வீட்டாரை உங்கள் கோணல்மாணலான இதயத்தால் நேசிக்கும்படி தேவனால் மட்டுமே மனிதர்களைக் கேட்க முடியும்" என்றார். ஆம், இது கடினம், ஆனால் தன்னலமின்றி மற்றவர்களை நேசிக்கும்படி தேவன் ஒரு நபரை மாற்றுகிறார்.

அந்நியர்களை நேசியுங்கள்:
அந்நியர்களிடம் அன்பையும் உபசரிப்பையும் காட்டுவது கிறிஸ்தவ சீஷர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது (எபிரெயர் 13:2). இது இயற்கையான பண்பல்ல, ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த காரியங்களில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அந்நியர்களைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.  நல்ல சமாரியன் உவமை, தேசிய, மத, இன, மொழி மற்றும் வர்க்கத் தடைகளைக் கடந்து, தேவைப்படும் ஒரு மனிதனுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது (லூக்கா 10:25-37).

சீஷர்களை நேசியுங்கள்:
ஒளியில் நடக்கும் விசுவாசிகள் மற்ற விசுவாசிகளை நேசிப்பார்கள் என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார் (1 யோவான் 4:20). கிறிஸ்தவ சீஷர்கள் தங்கள் கண்ணோட்டம், மற்றவர்களோடான தொடர்பு மற்றும் நடத்தை ஆகியவற்றில் உலகளாவியதாக இருக்க வேண்டும்.  அவர்கள் சமூக (சாதி), பொருளாதார நிலை, தேசியம், மொழி மற்றும் மதப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சீஷர்களை நேசிக்க வேண்டும்.

பாவிகளை நேசியுங்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூத மத உயரடுக்கால் வரி வசூலிப்பவர் மற்றும் பாவிகளின் நண்பர் எனக் கேலி செய்யப்பட்டு கிண்டல் செய்யப்பட்டார் (மத்தேயு 11:19). தொழுநோயாளிகள் உட்பட சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுடன் ஆண்டவர் இயேசு நன்கு உறவு கொண்டாடினார்.  தேவன் பாவிகளை நேசிக்கிறார், ஆனால் பாவத்தை வெறுக்கிறார்.  சீஷர்கள் பாவிகளை நேசிக்காவிட்டால், அவர்களால் அன்பின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

வாழ்க்கைத் துணையை நேசியுங்கள்:
கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று வேதாகமம் மட்டுமே கட்டளையிடுகிறது.  இதை வேறு எந்த மதமும் போதிக்கவில்லை.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திருச்சபையை நேசித்ததைப் போலவும், அதற்காக மரித்ததைப் போலவும் ஒரு கணவன் தன் மனைவியை தியாகமாக நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எபேசியர் 5:25).

எதிரிகளை நேசியுங்கள்:
கர்த்தராகிய இயேசு எதிரிகளை நேசிக்கவும், துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களை மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 5:44). எதிரி பசியுடன் இருந்தால், அவர்களுக்கு சீஷர்கள் உணவளிக்க வேண்டும் மற்றும் எதிரி தாகமாக இருந்தால், அவனுடைய தாகத்தைத் தணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது (ரோமர் 12:20).

நான் மற்றவர்களை நேசிக்கிறேனா, ராஜரீக பிரமாணத்தை நிறைவேற்றுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download