முகத்தை மறைக்கும் கர்த்தர்

சங்கீதம் 27:8-9(1-10) என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்
சங்கீதம் 143:72 உமது முகத்தை எனக்கு மறையாதேயும் 
சங்கீதம் 30:7 உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்

1. பாவத்தினிமித்தம் மறைக்கிறார் 
ஏசாயா 59:2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர்         உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது
சங்கீதம் 51:9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்

2. துரோகத்தினிமித்தம் மறைக்கிறார் 
எசேக்கியேல் 39:23-24 இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித் தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்து கொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின  படியால் என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக் களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள். அவர்களுடைய அசுத்தத்துக்குத்தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

3. பொல்லாப்பினிமித்தம் மறைக்கிறார் 
மீகா 3:4 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறு உத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்வார்
எரேமியா 33:5 இந்த நகரத்தின் எல்லா பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே...

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download