சபைக்குள் இருக்கும் பாவத்தால் வருந்துதல்

தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதில் நல்ல சிரத்தையுடன் இருந்த ஒரு போதகர், மறைமாவட்டத்தில் சிலரால் அணுகப்பட்டார்.  அவர்தான் பிஷப் ஆகவும், சபையை வழிநடத்தவும் சரியான நபராக இருப்பார் என்று சொன்னார்கள். அவர்களின் முகஸ்துதியால் ஏமாற்றப்பட்டார், வஞ்சிக்கப்பட்டார். அவரும் போட்டியிட சம்மதித்து பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சில மாதங்களுக்குள், வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் அவரை பிஷப் ஆக்க நினைத்துள்ளார்கள் என்பதையும் , அவர்கள் இவரைக் கொண்டு பல காரியங்கள் செய்ய நினைத்ததையும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் அங்கு பல குழப்பங்கள் இருப்பதையும், இந்நிர்வாகம் தேவனளித்த வரம் அல்ல என்பதை உணர்ந்ததும், அவர் ராஜினாமா செய்தார். எல்லாம் புரிந்து சுதாரிப்பதற்குள்  நிதி நேர்மை இல்லை, சொத்துக்கள் விற்கப்பட்டன, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் பணியிடத்தை நிரப்ப லஞ்சம் நிர்ணயித்ததும், அதுமாத்திரமல்ல விபச்சார உறவுகளும் கூட இருந்ததை அறிந்தார்.  ஆனாலும், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக, அவர் இதை கடந்து வந்ததில் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். ஒரு உளவியலாளரிடம் சிகிச்சை பெறவும் வேண்டியிருந்தது.  சோதோமில் உள்ள லோத்தின் அனுபவத்தைப் போலவே ஊழல் நிறைந்த அமைப்பில் அவருடைய அனுபவமும் இருந்தது.  நீதியுள்ள லோத் நகரத்தில் நடந்ததை  தினமும் பார்த்த மற்றும் கேட்டவற்றால் கோபமடைந்தார் அல்லது வருத்தப்பட்டார் என்று பேதுரு எழுதுகிறார் (2 பேதுரு 2:8).

பாவ உலகம்:
ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் காரணமாக உலகம் ஆவிக்குரிய இருளில் மூழ்கியது.  முன்பை விட இப்போது அதிகமான மக்கள் இருளில் வாழ்கின்றனர்.  இதயங்கள் கடினப்படுதலும், பாவிகளின் வெட்கமின்மையும் சர்வசாதாரணமாக காணப்படுகின்றது.  பாவங்கள் கூட கவர்ச்சியான விஷயமாக கருதப்படுகின்றன. ஆம்,  தலைகீழான உலகில் நேராக நிற்பது என்பதே ஒரு சவால்.

 பாவத்தின் கொள்கை:
 தூக்கி எறியப்படும் எதுவும் புவியீர்ப்பு விசையால் மீண்டும் பூமிக்கு இழுக்கப்படுவதால், மனிதர்கள் பாவத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.  தான் நன்மை செய்ய விரும்புவதாகவும், ஆனால் பாவத்தின் கொள்கை தன்னுள் குடிகொண்டிருப்பதால் செய்வதறியாது இருப்பதாகவும், "நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்" (ரோமர் 7:19) என பவுல் புலம்புகிறார். 

வருத்தமும் துக்கமும்:
 ஒரு நேர்மையான நபர், உணர்திறன் கொண்ட ஆவியின் காரணமாக, தன்னைச் சுற்றியுள்ள மக்களின் செயல்களால் வருத்தப்படுகிறார். அப்படி செய்பவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறும்போது அந்த துக்கம் இன்னும் அதிகமாகிறது.

 தீர்ப்பு:
 நீதிமான்களை இடறலடையச் செய்பவர்களை தேவன் நியாயந்தீர்ப்பார். "அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?" (சங்கீதம் 11:3). தாவீதைப் போலவே, தேவனுடைய மக்கள் உறுதியான ஆவியுடன் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

 நான் பாவத்தில் மூழ்கிவிட்டேனா அல்லது அதை மேற்கொள்ள ஜெயத்தை தேடுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download