அமைதியான எதிர்ப்பாளர்கள்

ஒரு சர்வாதிகாரி தன்னை விமர்சித்த ஒரு அதிருப்தியாளரைக் குறித்து கோபமடைந்தார்.  என்ன செய்ய வேண்டும் என்று அவரது உதவியாளர் சர்வாதிகாரியைக் கேட்ட போது; 'அவரை அமைதிப்படுத்துங்கள்' என்பதாக கூறினார்.  உதவியாளரோ எதிர்ப்பாளரை சுட்டுக் கொன்றார்.  அதிருப்தியாளர்கள், எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் மற்றும் துன்புறுத்துபவர்களை  அமைதிப்படுத்துவதைப் பற்றி பேதுரு எழுதுகிறார்.  ஆனால் இது உண்மையில் எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு முற்றிலும் இயல்பான பதில்.  "நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 பேதுரு 2:15).

தேவ சித்தம்:
தேவனுடைய சித்தத்தைச் செய்வது என்பது துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து கிறிஸ்தவர்களுக்குமானதாகும்.  பேரரசர் நீரோவின் கீழ், அரசாங்கத்தால்  துன்புறுத்தலுக்கு ஆளான துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதுகிறார்.  இது அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவது மற்றும் நியாயமான சுதந்திரத்திற்காக போராடுவது அல்ல, மாறாக தேவ சித்தத்தைச் செய்வதாகும்.

நன்மை செய்:
துன்புறுத்தலுக்கு தகுந்த பதிலடியாக தேவனுடைய சித்தத்தைச் செய்வதை பேதுரு குறிப்பிடுகிறார், அதாவது நன்மை செய்வதாகும்.  நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம் என்று பவுல் எழுதுகிறார் (கலாத்தியர் 6:9). நன்மை செய்வதற்காக ஒரு கிறிஸ்தவர் துன்புறுத்தப்பட்டாலும் சோர்வாகவோ, தளர்ந்து விடவோ அல்லது விரக்தியடையவோ கூடாது.  கர்த்தராகிய இயேசு தம்முடைய சொந்த ஜனங்களாலே கொடுமையான முறையில் சிலுவையில் அறையப்பட்டபோது மன்னிப்புக்கான வாய்ப்பை வழங்கினார் (லூக்கா 23:34). தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி ஸ்தேவான் கூட கேட்டார் (அப்போஸ்தலர் 7:60).‌ தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு நன்மை செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன.

அறியாமை பேச்சு:
கிறிஸ்தவர்களின் அடக்குமுறை, சுரண்டல், துன்புறுத்தல் ஆகியவற்றை நியாயப்படுத்துவது வெறும் அறியாமை பேச்சாகும்.  அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், தேவனின் நற்குணத்தையும், தேவ ஆவியின் மாற்றும் வல்லமையையும், நாடுகளுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதற்காக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையையும் அறியவில்லை.  அறியாமையை ஞானத்தால் எதிர்கொள்வது ஒரு பயனற்ற செயலாகும்.  இயற்கை, வேதம் அல்லது வரலாற்றில் இருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள மறுப்பதால் அவர்கள் அறியாதவர்கள்.

முட்டாள்கள்:
தேவனுக்கு அஞ்சாதவர்கள் முட்டாள்கள்.  தேவ பயம் இல்லாமல், முட்டாள்தனம் மட்டுமே உள்ளது, ஞானம் இல்லை (நீதிமொழிகள் 9:10). பல மதங்களின் அடிப்படைவாதிகள் கூட முட்டாள்களைப் போல நடந்து கொள்கிறார்கள், ஏனெனில் அவர்களின் செயல் தேவனுக்கு பயப்படுவதால் அல்ல, மாறாக தங்களை, தங்கள் கலாச்சாரம் அல்லது தங்கள் மதத்தைக் குறித்துப் பெருமை கொள்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைப் பொய்யாக மாற்றிக்கொண்டதாக பவுல் எழுதுகிறார் (ரோமர் 1:25). சத்தியத்தை அறியாமை என்பதை மன்னிக்க முடியாது, தேவனால் நியாயந்தீர்க்கப்படும்.

முட்டாள்தனமான எதிர்ப்பாளர்களுக்கும் நன்மை செய்வதில் நான் ஒரு சிறந்த நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download