அருட்பணி மற்றும் மாற்றம்பெற்ற வாழ்க்கை!

முசாஹர்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு மக்கள் குழுவாக உள்ளனர், அவர்கள் ஏழை நிலமற்ற தொழிலாளர்கள். எலிகளைக் கொன்று தின்று பிழைக்கின்றனர். அவர்கள் குற்றப் பழங்குடியினராகவும் பட்டியலிடப்பட்டனர். சுதா வர்கீஸ் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அவர்களின் அதை நிலையைக் கடக்க ஒரு உறுதிப்பாடு தேவை என்று கண்டறிந்தார். டானாபூர் பகுதிக்கு தனது மிதிவண்டியில் சென்று அவர்களை பார்வையிட்டார். அவர்களின் நம்பிக்கையைப் பெற, அவர்களைப் போலவே இவரும் எலிகளைத் தின்றார். அதையே அவர் தொடர்ந்து செய்துவந்தார். மக்கள் அவரை நம்பினர், அவர்களுடன் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து படிப்படியாக மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஒரு கன்னியாஸ்திரியாக, அவர் அவர்களுக்கு கல்வியையும் ஞானத்தையும் கொண்டு வந்தார். குழந்தைகள் கல்வி கற்றார்கள், பெண்கள் ஓரளவு வருமானம் ஈட்ட ஊக்குவிக்கப்பட்டனர், பெண்களைச் சுரண்டிய உயர்சாதி ஆண்கள் இனி அவ்வாறு செய்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொண்டார்கள். சிலருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. ஒன்றிய அரசால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது மற்றும் பீகார் மாநில சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவரானார். (ஏ. ஜே. பிலிப், இந்தியன் கடன்ட்ஸ், 12 நவம்பர் 2023)

அன்பினால் நெருக்கி ஏவப்படுதல்: 
மக்களிடையே சென்று அருட்பணி செய்ய “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது;” என்று பவுல் எழுதுகிறார். (II கொரிந்தியர் 5:14) ஒதுக்கப்பட்ட மற்றும் அன்பற்ற மக்கள், சுதா வர்கீஸ் போன்ற மிஷனரிகள் மூலம் அன்பைப் பெறுகிறார்கள்.

அக்கறை: 
நாம் அவர்கள் மீது அக்கறைகொள்கிறோம் என்பதை அவர்கள் உணராத வரை, அவர்கள் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். பல மொழி பேசும் படித்த பெண்ணை விளிம்பு நிலை சமூகம் ஏற்றுக் கொள்வார்களா? சுதா, அவர்கள் மீது அக்கறை கொண்டார், அவர்களுடன் உணவருந்தத் தயாராக இருந்தார். அவரது அன்பும், அக்கறையும் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றது, மேலும் அவரால் மாற்றத்தை கொண்டு வர அவர்களுக்கு சேவை செய்ய முடிந்தது.

மாற்றத்திற்குக் காரணமாக அமையும் ஒருவர்: 
விசுவாசத்தோடு நற்செய்தியை ஏற்றுக் கொள்ளும் மக்களின் வாழ்வில் அருட்பணி மாற்றத்தைக் கொண்டுவருகிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது, தங்கள் திறனை உணர்கின்றனர். முசாஹர் பிள்ளைகள் மற்ற வசதி பெற்ற குழந்தைகளை விட குறைந்த திறன் கொண்டவர்கள் அல்ல. சமதளமான விளையாட்டு மைதானம் கொடுக்கப்பட்டால், அனைத்து குழந்தைகளும் சிறந்து விளங்க முடியும். அருட்பணியாளர்கள், கர்த்தருடைய, திருவசனம் மற்றும் பரிசுத்த ஆவி எனும் இணையற்ற வளங்களைக் கொண்டு மாற்றத்திற்குக் காரணமாக அமைபவர்கள். 

போட்டியாளர்கள்: 
அத்தகைய நபர்களுடன் எலிகளை சாப்பிட்டு ஒரு முழுமையான அருட்பணியைச் செய்ய யாராவது தயாராக இருக்கிறார்களா? மற்ற மதத்தினரிடமிருந்தோ அல்லது மதச்சார்பற்ற அல்லது அரசியல் தலைவர்களிடமிருந்தோ இத்தகைய பணிகளுக்கு போட்டியாளர்கள் இல்லை.

நான் சுவிசேஷத்தின் மூலம் சமுதாயத்தில் ஈடுபட்டு மாற்றத்தை ஏற்படுத்துவேனா? 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download