மனிதனும் வியர்வையும்

உஷ்ணமான காலநிலையில் வாழ்பவர்கள் நிறைய வியர்வையை அனுபவிக்கிறார்கள், இது உடலில் உப்புபடிந்தது போல் இருக்கும் மற்றும் துர்நாற்றம் வீசும்.  இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் இயற்கையான குளிர்விக்கும் வழிமுறையாகும்.  வெப்பம், கடின உழைப்பு, பயம், மன அழுத்தம், உடற்பயிற்சி போன்றவற்றால் வியர்வை அதிகரிக்கிறது.  வியர்வை பற்றி வேதாகமம் மூன்று முறை குறிப்பிடுகிறது.

வீழ்ச்சி
ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடத் தேர்ந்தெடுத்தபோது, நன்றியின்மை, பேராசை, நம்பிக்கையின்மை அல்லது சந்தேகம், கீழ்ப்படியாமை மற்றும் கலகம் என ​​அவர்கள் பாவம் செய்தார்கள்;  பாவத்தின் உடனடி விளைவு ஆதாம் மற்றும் முழு மனிதகுலத்தின் மீதும் வந்த சாபம் (ஆதியாகமம் 3:17-19). நகரங்களில் உள்ள சமையலறை மற்றும் அலங்கார தோட்டங்களைப் போலல்லாமல், பயிரிடுவது கடினமான வேலை.  முள்ளும் குருக்கும் இருப்பதால் பலனற்ற தன்மை இருக்கும், அதே போல் உகந்த மகசூல் கிடைக்காது ஆனால் மனிதர்கள் கடின உழைப்பைச் செய்ய வேண்டும்.  ஆதாம் அல்லது எந்தவொரு மனிதனும் குடும்பத்தை காப்பாற்றுவதற்கும், தேவைகளை சந்திப்பதற்கும், நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கும், குழந்தைகளுக்கான காரியங்களை சந்திப்பதற்கும் என குறைந்த வளங்களுடன் போராடுவது என்பது கஷ்டமான காரியமாக இது விளக்கப்படுகிறது.  துரதிர்ஷ்டவசமாக, சமூக ஊடகங்களால் தூண்டப்பட்ட பிற கவலைகள் இன்னும் அதிகமாக மக்களை மூழ்கடிக்கும்.

ஊழியம்
எசேக்கியேல் தீர்க்கதரிசியும் வியர்வை பற்றி எழுதுகிறார்.  அவர் தேவ மகிமையுடனான ஒரு புதிய ஆலயத்தை முன்னறிவித்தார்.  இது ஒரு பரந்த அமைப்பு, ஆசீர்வாதத்தின் ஆதாரம்.  ஆசாரியர்கள் ஆலயத்தில் பணிபுரிவார்கள், அவர்கள் வியர்வையை உண்டாக்கும் கம்பளியை அல்ல, சணல்நூல் வஸ்திரங்களை அணிவார்கள் (எசேக்கியேல் 44:17-18).‌ ஆலய ஊழியம் என்பது காணிக்கை மற்றும் பலிபீடத்தின் மீது பலி செலுத்துதல் என கடின உழைப்பு.‌ ஊழியத்தில் இருப்பவர்கள் தங்கள் சொந்த வலிமையிலும் முயற்சியிலும் பணி செய்யக்கூடாது, மாறாக தேவ சித்தத்தின்படி, அவருடைய வளங்களைக் கொண்டு அதைச் செய்ய வேண்டும்.

மீட்பு
கெத்செமனே தோட்டத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வேதனையைப் பற்றி மருத்துவர் லூக்கா எழுதுகிறார். “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). ஆண்டவராகிய இயேசு ஆதாமின் முடிவை மாற்றினார்.  ஆதாம் சொன்னது:  ‘என்னுடைய விருப்பம், உங்களுடையது அல்ல’.  கர்த்தராகிய இயேசு கூறினார்:  ‘உம் சித்தம் என்னுடையது அல்ல’.  அவரது இரத்த வியர்வை, சாபத்தை முறியடித்தது.  அவர் மரணத்தைத் தழுவினார், பூமியின் புழுதியில் புதைக்கப்பட்டார், மேலும் மனிதகுலத்திற்கு இரட்சிப்பை வழங்குவதற்காக மீண்டும் உயிர்த்தெழுந்தார். உழைப்பு அல்லது கவலை அல்லது பயம் அல்லது பதட்டம் காரணமான வியர்வை இல்லாத நித்தியத்தின் உறுதிமொழி மற்றும் ஒவ்வொரு கண்ணீரும் துடைக்கப்பட்டது.

ஆண்டவரின் இரத்த வியர்வைக்கு நான் நன்றியுள்ள நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download