தீமையை நியாயப்படுத்துவதா அல்லது பாவங்களை அறிக்கையிடுவதா?

சென்னையில் வங்கி நிர்வாகி ஒருவர் தனது சொந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  31.5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். அவருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இவ்வாறு இருந்தது; “இந்த உலகில் சரி, தவறு என்று எதுவும் இல்லை.  நமது செயல்களை நியாயப்படுத்த முடிந்தால் அது சரி; இல்லை என்றால் அது தவறு”  (DTNEXT செய்தி ஆகஸ்ட் 20, 2022)

 1) ஒழுக்கம் இல்லை:
இந்த திருடனின் கூற்றுப்படி, சரி அல்லது தவறு என்பது இல்லை; அது எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்ததே. அவரைப் பொறுத்தவரை, எல்லா செயல்களும், வார்த்தைகளும், எண்ணங்களும், நடத்தைகளும் இயல்பானவை.  அந்த வகையில் பார்த்தால், பாவம் என்பது ஒன்று இல்லை. சட்டம் இல்லாத நிலையில், ஒழுக்கங்கள் இல்லை, ஒழுக்கம் இல்லாதிருந்தால் பாவங்கள் இல்லை.  இருப்பினும், "பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்" என்பதாக வேதாகமம் கற்பிக்கிறது (1 யோவான் 3:4). 

 2) பாவி இல்லை:
சரி அல்லது தவறு என்பதே இல்லை என்றால், யாருமே தீயவரோ அல்லது பாவியோ அல்லது குற்றவாளியோ அல்லவே.  இருப்பினும், அனைவரும் பாவிகள் என்று வேதாகமம் அறிவிக்கிறது. எல்லாரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள் (ரோமர் 3:23). 

3) நியாயாதிபதி இல்லை:
திருடன் பாவத்தை மறுப்பதன் மூலமாகவும் மற்றும் கட்டளைகளை மறுப்பதன் மூலமாகவும் திருடன்  தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று நினைத்தான். அவனைப் பொறுத்தவரை நீதிமன்றமோ நீதிபதியோ இல்லை. "சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்" என்று வேதாகமம் கற்பிக்கிறது (2 கொரிந்தியர் 5:10). 

 4) முழுமையான தரநிலைகள் இல்லை:
திருடன் தன் மனசாட்சியிலிருந்து தப்பிக்க முடியும் என்று நினைத்தான், தன்னை நியாயப்படுத்தினான்.  தேவனுடைய தராதரங்கள் நிராகரிக்கப்படும்போது, ​​அவர் தம்முடைய சொந்த தராதரங்களை உருவாக்க முடியும்.  எனவே, தன்னை நல்லவன், புத்திசாலி, பெரியவன் என்று நியாயப்படுத்திக் கொள்வார்கள்.    புத்திசாலிகள் அல்லது அறிவு ஜீவிகள் தங்கள் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக அமைப்புகள், சூழ்நிலைகள், அவசரநிலைகள், சதியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தங்கள் குற்றச் செயல்களை குறை கூறலாம் அல்லது பழி போடலாம்.

5) தப்பிக்க முடியாது:
இந்தத் திருடன் புத்திசாலியாக, இந்தக் கொள்ளையினால் நிம்மதியான வாழ்க்கையை வாழ விரும்பினாலும் அவனால் தப்பிக்க முடியவில்லை.

மனந்திரும்பி, உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் வருவதே உண்மையான வழி.  "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9).

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் என் பாவங்களையெல்லாம்  அறிக்கையிட்டு அவரின் இரக்கத்தைப் பெறுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download