எப்படி ஆட்சி செய்கிறீர்கள்?

யேசபேல் அரசி தன் கணவனான இஸ்ரவேலின் அரசனை; “நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா?" (1 இராஜாக்கள் 21:7) என்பதாக ஏளனம் செய்தாள். நாபோத்துக்குச் சொந்தமான நிலம் தனக்கு சொந்தமாகவில்லை என்பதால், அதை நியாயமான விலைக்குக்கூட விற்க மறுத்துவிட்டதால் சோகமாக முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான் ஆகாப்.  யேசபேலைப் பொறுத்தவரை, துக்கமாக இருப்பது முட்டாள்தனம் மற்றும் தேசத்தை ஆளும் திறன் அல்லது அறிவு ஆகாபுக்கு இல்லை.  யேசபேலைப் போலவே, ஆட்சியாளர்கள் (ராஜாக்கள், சர்வாதிகாரிகள், பேரரசர்கள்...) அவர்களைத் தீமை செய்யத் தூண்டும் அரசவையினர் உள்ளனர்.  யேசபேல் இரண்டு அயோக்கியர்களை பொய் சாட்சிகளாக வைக்கிறாள், மேலும் நாபோத் தூஷணம் மற்றும் தேசத்துரோகம் செய்ததாக பொய் சொல்லி தூக்கிலிடப்பட்டான், ஆகாப் நிலத்தை ஆக்கிரமித்தான்.  எலியா தீர்க்கதரிசி மட்டுமே ஆகாபை எதிர்க்க தைரியம் கொண்டிருந்தான், மற்றவர்கள் அனைவரும் ஆகாப் மற்றும் யேசபேலின் பக்கம் இருந்தனர்.

கடவுள் இல்லை:
யேசபேலின் உலகக் கண்ணோட்டத்தில் ராஜா தான் கடவுள் அல்லது கடவுளுக்கு சமமானவர்‌ அல்லது கடவுளைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்.  முழு தேசம், அனைத்து மக்கள் மற்றும் அனைத்து வளங்கள் மீதும் அரசனுக்கு அனைத்து அதிகாரமும், ஆளுகையும், ஆணையும் உள்ளது.  பல கலாச்சாரங்களில், ராஜா தெய்வீகமானவராகக் கருதப்படுகிறார், மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தடையற்ற தெய்வீக ஆணையைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

 சட்டம் இல்லை:
 உலக ஆட்சியாளர்கள் தங்களை சட்டத்தின் உருவகமாக கருதுகின்றனர்.  அவர்களே சட்டங்களை அறிவிக்கிறார்கள், சட்டங்களை விளக்குகிறார்கள், சட்டத்தின் அடிப்படையில் நீதியை அறிவிக்கிறார்கள். இன்னும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜா தனக்கு அல்லது எல்லா சட்டங்களுக்கும் மேலாக தானே மேலானவர் என கருதுகிறார்.  அவர்களின் உலகக் கண்ணோட்டத்தில், சட்டங்கள் மனிதர்களுக்கானது மற்றும் மன்னர்கள் சாகாவரம் உள்ளவர்கள்.

 உரிமைகள் இல்லை:
 தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தெய்வீக உலகக் கண்ணோட்டத்தின் விளைவாக, மற்றவர்கள் தங்கள் உரிமைகளை இழக்கிறார்கள்.  ராஜா எது சொன்னாலும் சரி, அதை எந்த குறையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  எதிர்ப்பாளர்கள் தேச விரோதிகளாக தண்டிக்கப்படுவார்கள்.  ஆகாபின் ஆசை தேசத்தின் ஆசை, நிலத்தைக் கொடுக்க மறுப்பது தேச விரோதமானது. தனி ஒருவருக்கான என்ற சொத்துரிமை இல்லை.

சத்தியம்/உண்மை இல்லை:
ஆட்சி என்பது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.  ஒரு விசுவாசமான குடிமகனைக் கொல்ல, ஒன்றுமற்ற குற்றச்சாட்டுகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் அயோக்கியர்களின் சாட்சிகள் போதுமானது.  கொல்லப்பட்டது நாபோத் மட்டுமல்ல, உண்மையும் நீதியும் கூட தான்.

இரக்கம் இல்லை:
யேசபேலைப் பொறுத்தவரை, நிர்வாகம் இரக்கமற்றதாகவும் மிருகத்தனமாகவும் இருக்க வேண்டும்.  அன்புக்கும் கருணைக்கும் இரக்கத்திற்கும் இடமே இல்லை.  இத்தகைய கடுமையான தண்டனை, மற்றவர்கள் உண்மையைப் பேசுவதிலிருந்தோ, குரல் எழுப்புவதிலிருந்தோ அல்லது அவர்களின் உரிமைகளைக் கோருவதிலிருந்தோ தடுக்க வேண்டும் என்பதே அவளின் தந்திரமான எண்ணம்.

 உண்மைக்காகவும் (சத்தியத்திற்காகவும்) நீதிக்காகவும் நிற்க எனக்கு தைரியம் இருக்கிறதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download