போதுமென்ற மனம் Vs பேராசை

ஒருவர் தனியார் வங்கியில் வேலை செய்து மாதம் 275000 ரூபாய் சம்பளம் பெற்று வந்தார்.  இது சராசரி தொழிலாளிக்கு (ஒரு நாளைக்கு ரூ. 500) ஓராண்டுக்கான ஊதியத்தை விட அதிகம்.  கடவுள் அவருக்கு கல்வி, திறமைகள் மற்றும் வாய்ப்புகளை அளித்தார்.  மணிகண்டனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.  ஜனவரி 1ம் தேதி, 2022 அன்று அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார் (தி இந்து நாளிதழ்  ஜனவரி 2, 2022). என்னவென்றால், அவருக்கு அதிக கடன்கள் இருந்ததால் அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.  மேலும் அவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்தார். அதில் விளையாடி ஜெயித்து பணக்காரர் ஆகலாம் என்று நினைத்தார். அவருக்கு இருந்த நல்ல வேலை குடும்பம் என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிர்ஷடமானது. ஆயினும்கூட, அவரது வாழ்க்கை ஒரு வேதனையான சோகத்தில் முடிந்தது. அதற்கான காரணத்தை எளிதாக சொல்லிவிட முடியும்; ஆம் காரணம் மனநிறைவின்மை தான்.

மனநிறைவின் ரகசியம்:
"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6). மனநிறைவின் இரகசியம் தேவபக்தியில் உள்ளது. ஒரு நபர் தேவனுடன் உறவு கொள்ளாதபோது, ​​அவரால் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் பெற முடியாது.  நாம் ஏன் வாழ்கிறோம் என்பது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் தீர்மானிக்கப்படுகிறது.

மனநிறைவுக்கான அடித்தளம்:
தேவபக்தி ஒரு நபருக்கு நமக்கு உலக வாழ்க்கை தற்காலிகமானது என உணர வைக்கிறது, எதையும் கொண்டு வரவில்லை, எதையும் கொண்டு போகமுடியாது என்பதை உணர உதவுகிறது. "உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்" (1 தீமோத்தேயு 6:7). 

மனநிறைவுக்கான அடிப்படை:
ஒரு நபர் வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் அறிந்தால், அந்த நோக்கத்திற்காக வாழ அடிப்படை வசதிகள் மட்டுமே தேவை என்பதை புரிந்துகொள்கிறார்.  அவற்றில் உணவு மற்றும் உடை என இரண்டை மட்டுமே பவுல் குறிப்பிடுகிறார். "உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்" (1 தீமோத்தேயு 6:8). அதே சமயம் அரசாங்கம் அல்லது மனித உரிமை அமைப்புகள் அடிப்படை தேவைகளில் மேற்கொண்டு சேர்க்கலாம்.  

அடங்காத ஆசை:
இன்னும் இன்னும் சேர்க்க வேண்டும் அல்லது பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையை பணம் உருவாக்குகிறது.  ஜான் டி. ராக்ஃபெல்லர், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர், அவருடைய நிகர மதிப்பு மொத்த அமெரிக்கப் பொருளாதாரத்தில் 1% ஆக இருந்தது, ஒரு நேர்காணலில் அவரிடம்:  எவ்வளவு இருந்தால் போதுமானது? என கேட்கப்பட்டது. அவர் பதிலோ: "இன்னும் கொஞ்சம் தேவை" என இருந்தது.

அழிவு:
செல்வத்தை பின்தொடர்வதன் விளைவுகள் சுய அழிவு.  பவுல் எழுதுகிறார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்" (1 தீமோத்தேயு 6:9)

நான் பேராசையால் உந்தப்படுகிறேனா அல்லது போதுமென்ற மனதுடன் அமைதியாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download