பக்தரா அல்லது பொய்யரா?

ஒரு பணக்கார மனிதன் தன்னை ஆன்மிகவாதியாகப் பிறருக்குக் காட்டினார். அவர் ஒரு புனிதருக்கு ஆலயத்தை கட்டினார், அதைப் பார்ப்பதற்காகவும் தரிசிப்பதற்காகவும் பரதரப்பட்ட மதத்தினர் வருகிறார்கள். அவரது இடத்தில் மதப் பிரமுகர்களுக்கு என சிறப்பு விருந்தினர் மாளிகை இருந்தது. குதிரைகள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் நாய்கள் என  வைத்திருந்தார்.  குளிர்காலத்தில், அவர் குதிரைகளுக்கு கம்பளி ஸ்வெட்டர்களை வழங்குவதோடு, மற்ற விலங்குகளுக்கு சாக்குகளுடன் ஆடைகளையும் வழங்கினார்.  இருப்பினும், விலங்குகள், வயல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் பெரிய வீட்டு வளாகங்களை பராமரிக்க ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர்.  அவர்களில் பலர் வறுமையில் வாடினார்கள்.  இந்த தொழிலாளர்களால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியவில்லை.  குளிர்காலத்தில், அவரது தொழிலாளர்கள் குளிரில் நடுங்குவார்கள், ஆனால் அவர் கவலைப்பட மாட்டார்.  அவரது உலகக் கண்ணோட்டத்தில் விலங்குகளின் நலன் மனித நலனைக் காட்டிலும் மேலானது. 

மனிதர்களை நேசியுங்கள்:
அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்; “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?" (1 யோவான் 4:20). மிருகங்களை விட மக்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.  யோபு ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறார்; "தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவர்களையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?" (யோபு 31:15). இன்றும் எல்லா மனிதர்களையும் தேவன் சிருஷ்டிக்கிறார். முதல் ஜோடி ஆதாம் மற்றும் ஏவாள் தேவ சாயலில் உருவாக்கப்பட்டனர். எல்லா மனிதர்களும் அவருடைய வழித்தோன்றல்களே.

அக்கறைப்படுங்கள்:
அக்கறையின்மை ஒரு ஆவிக்குரிய நோய் மற்றும் பாவம். சோதோம் மற்றும் கொமோரா மீதான தீர்ப்புக்கான காரணங்களில் ஒன்று அக்கறையின்மை (நிர்விசாரம்) (எசேக்கியேல் 16:49). இதோ, உங்கள் உபவாச நாளில் நீ உன் விருப்பத்தைத் தேடி, உன் வேலையாட்களையெல்லாம் ஒடுக்குகிறாய் (ஏசாயா 58:3) என்பதாக ஏசாயா கண்டிக்கிறார். 

கேளுங்கள்:
தேவ பிள்ளைகள் துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரலைக் கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பல செல்வந்தர்கள் ஏழைகளின் அழுகுரலைக் கேட்பதில்லை, ஆனால் விலங்குகளின் துன்பத்தைக் கேட்கிறார்கள். "ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்" (நீதிமொழிகள் 21:13). 

பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்துங்கள்:
"பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்" (ஏசாயா 58:10); உபவாசம் உட்பட உண்மையான ஆன்மீகம் அல்லது ஆவிக்குரிய வாழ்வு என்பது பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், துன்பப்பட்டவர்களை திருப்திப்படுத்துவதும் என்று ஏசாயா அறிவிக்கிறார்.  

நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுகிறேனா அல்லது மற்றவர்களுக்கு உதவுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download