தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை

ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்யும் நாட்டில் ஒரு இளம் பெண் தன்னார்வத் தொண்டு செய்தாள்.  ஆங்கில மொழி ஆசிரியராக இருந்தாள்.  கட்டுப்பாடுகள் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது மற்றும் உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்வதில் அவள் ஈடுபட்டால் அரசாங்கம் அவளை வெளியேற்றலாம்.  அவள் தங்குவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது, அதில் அவளைக் கண்காணிக்க ஒரு சிறிய மைக்ரோஃபோன் பொருத்தப்பட்டது.  அவள் ஏதேனும் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொண்டாளா என்பதை அவர்கள் அறிய விரும்பினர்.  விழிப்புடன் இருந்த ஆசிரியர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.  ஒவ்வொரு நாளும் அவள் வேதாகமப் பகுதிகளை ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழியிலும் படிப்பாள், அதனால் கண்காணிக்கும் பாதுகாப்புப் பணியாளர்கள் சத்தியத்தைக் கேட்பார்கள். அங்கு தனது இருபது வருட சேவையில் தினமும் வேதாகமத்தைப் படித்தாள், விதைக்க வேண்டிய சத்தியத்தை விதைத்தாள். அவள் நித்தியத்தில் 30,60 மற்றும் 100 மடங்கு கனியை எதிர்பார்க்கிறாள். "தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை அல்லது பிணைக்கப்படவில்லை அல்லது  தடுக்கப்படவில்லை" (2 தீமோத்தேயு 2:9) என்று பவுல் கூறுகிறார். 

பருவத்தில்:
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள சரியான சூழல், திறந்த கதவுகள் மற்றும் வாய்ப்புகள் இருக்கும்.  உலகின் சில பகுதிகளில், பிரசங்கம் வரவேற்கப்படுகிறது, மக்கள் கேட்கிறார்கள்.  அவர்கள் கேட்கும் அந்த பருவத்தை சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க திறம்பட பயன்படுத்த வேண்டும்.

பருவத்திற்கு வெளியே:
சில நாடுகளில், நற்செய்திக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன.  இந்த இளம் பெண் அப்படிப்பட்ட ஒரு நாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தாங்கியவர்.  திறந்த கதவு அல்லது வாய்ப்பு இல்லை, ஆனாலும் அவளால் சத்தியத்தை அறிவிக்க முடிந்தது.

 புலப்படும் அல்லது புலப்படாது:
 பார்வையாளர்கள் யாரென்று தெரியும் போது பிரசங்கம் செய்வது எளிது.  வெகுஜன ஊடகங்களுக்கு தன் பார்வையாளர்கள் யார் என்பது தெரியும்.  இருப்பினும், இந்த பெண்ணின் சூழலில், எத்தனை பேர் கேட்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  அந்த கேட்பவர்களை அவளால் அறியவோ பார்க்கவோ முடியாது.

 ஆக்கப்பூர்வமான வழிகள்:
 பல ஆக்கப்பூர்வமான வழிகளைப் பயன்படுத்தி அருட்பணியை நிறைவேற்ற வேண்டும்.  சில முறைகள் வேலை செய்யவில்லை என்றால், மற்ற முறைகளை உருவாக்க வேண்டும்.

உக்கிராணத்துவம்:
இந்த இளம் பெண் தேவன் கொடுத்த அனைத்து வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பொறுப்பாளராக இருந்தார்.  சொல்லப்போனால், வேதாகமத்தின் செய்திகளைப்  பெருக்கவும் அதிகமாக்கவும் எதிரிகளின் உபகரணங்களையேப் பயன்படுத்தினாள்.  இறையாண்மையுள்ள தேவன் துன்மார்க்கரையும் அவர்களுடைய உடைமைகளையும் பயன்படுத்தி  நற்செய்தியை அனுப்ப முடியும்.

 நான் ஆக்கப்பூர்வமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் வார்த்தையைப் பகிர்ந்து கொள்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download