இயேசுகிறிஸ்துவின் பிறப்பு

1. தேவனுக்கு மகிகை
லூக்கா 2:14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

2. சாஸ்திரிகளுக்கு சந்தோஷம்
மத்தேயு 2:10 (சாஸ்திரிகள்) இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தேஷமடைந்தார்கள்.

3. மேய்ப்பர்களுக்கு நற்செய்தி
லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

4. யோசேப்புக்கு ஆச்சரியம்
லூக்கா 2:33 இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
5. மரியாளுக்கு சிந்தனை
லூக்கா 2:18,19 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக்  கேட்ட யாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்  மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைப் 

6. சிமியோனுக்கு சமாதானம்
லூக்கா 2:28,29 சிமியோன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்.

7. ஏரோதுக்கு கலக்கம்
மத்தேயு 2:2,3 யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்ட பொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download