இருமனம் இணையும் திருமணம்

1. ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் 
எபேசியர் 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்;
எபேசியர் 5:28,33; கொலோசெயர் 3:19 
அடங்கியிருங்கள்
எபேசியர் 5:22,24 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
கொலோசெயர் 3:18; 1பேதுரு 3:1,6 
அஞ்சியிருங்கள்
எபேசியர் 5:21 தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்
எபேசியர் 5:33; 1கொரிந்தியர் 7:2 

2. ஒருவருக்கொருவர் ஆதரவாயிருங்கள் 
1கொரிந்தியர் 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமை யைச் செய்யக்கடவன், அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். எபேசியர் 5:29
ஆறுதலாயிருங்கள் 
1கொரிந்தியர் 7:10-11 மனைவியானவள் தன் புருஷனை விட்டு போகக் கூடாது. புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
ஆதியாகமம் 24:67 
ஆருயிராயிருங்கள்
1பேதுரு 3:7 புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக் கிறபடியினால்...அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்

3. ஒருவருக்கொருவர் இன்பமாயிருங்கள் 
எபேசியர் 5:31 மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
மத்தேயு 19:5; ஆதியாகமம் 2:24 
இணக்கமாயிருங்கள், 
ஆதியாகமம் 2:23 இவள் என் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்
இணைப்பிரியாதிருங்கள்
மத்தேயு 19:6 அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்
Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download