சங்கீதம் 121:1-8

121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
121:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
121:3 உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
121:4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
121:5 கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
121:6 பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
121:7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
121:8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.




Related Topics


எனக்கு , ஒத்தாசை , வரும் , பர்வதங்களுக்கு , நேராக , என் , கண்களை , ஏறெடுக்கிறேன் , சங்கீதம் 121:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 121 TAMIL BIBLE , சங்கீதம் 121 IN TAMIL , சங்கீதம் 121 1 IN TAMIL , சங்கீதம் 121 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 121 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 121 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 121 TAMIL BIBLE , PSALM 121 IN TAMIL , PSALM 121 1 IN TAMIL , PSALM 121 1 IN TAMIL BIBLE . PSALM 121 IN ENGLISH ,