எபேசியர் 2:12-18

2:12 அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
2:14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானகாரராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
2:17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
2:18 அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.




Related Topics


அக்காலத்திலே , இயேசுகிறிஸ்துவைச் , சேராதவர்களும் , இஸ்ரவேலுடைய , காணியாட்சிக்குப் , புறம்பானவர்களும் , வாக்குத்தத்தத்தின் , உடன்படிக்கைகளுக்கு , அந்நியரும் , நம்பிக்கையில்லாதவர்களும் , இவ்வுலகத்தில் , தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று , நினைத்துக்கொள்ளுங்கள் , எபேசியர் 2:12 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 2 TAMIL BIBLE , எபேசியர் 2 IN TAMIL , எபேசியர் 2 12 IN TAMIL , எபேசியர் 2 12 IN TAMIL BIBLE , எபேசியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 2 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 2 TAMIL BIBLE , Ephesians 2 IN TAMIL , Ephesians 2 12 IN TAMIL , Ephesians 2 12 IN TAMIL BIBLE . Ephesians 2 IN ENGLISH ,