ஈசாக்கு போன்ற வேதாகம தலைவர்கள் தனது மனைவிக்காக ஜெபித்தனர் (ஆதியாகமம் 25:21). சில கலாச்சாரங்களில், தனது கணவருக்காக நோன்பு இருப்பது, பிராத்தனைகள் செய்வது என்பது ஒரு மனைவியின் பொறுப்பாகும். அது ஒரு பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதேசமயம் கணவன் மனைவிக்காக உபவாசிப்பாரா அல்லது விரதம் இருப்பாரா என்பது சிறிது கேள்விக்குறியே. துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெண் தனது கணவருக்காக விரதம் இருந்து ஜெபித்தாள், பின்னர் கணவன் செய்த துரோகத்திற்காக அவரை விஷம் வைத்து கொன்றாள் (ஹிந்துஸ்தான் டைம்ஸ், அக்டோபர் 21, 2024). ஆம், தன் விரதம் முடிந்ததும் அவருக்கு நல்ல உணவை வழங்கினாள், அவன் அவளை நம்பினான், ஆனால் அதில் விஷம் கலந்திருந்தது.
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனை:
மனைவிகள் பாரம்பரியமாக தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக வேண்டுவதுண்டு. திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள், விதவையாக மாற விரும்பவில்லை. கைம்மை நிலைக்கு பயந்து, கடுமையான சமூக மற்றும் பொருளாதார யதார்த்தங்களுடன், தங்கள் கணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார்கள்.
பழிவாங்குதல்:
கணவர் தனது மனைவிக்கு உண்மையாக இல்லை. அவர் வேறொரு பெண்ணை விரும்பினார், மேலும் அவளுடன் விபச்சாரம் செய்தார், அவர் இரண்டு கட்டளைகளை மீறினார். இந்தப் பெண் தனது கணவரைக் கொலை செய்வதன் மூலம் பத்துக் கட்டளைகளையும் மீறினாள் என்றே சொல்ல வேண்டும் (யாத்திராகமம் 20:1-17).
முரண்பாடு:
அவள் தன் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டினாள், அதனால் அவள் விதவையாகிவிட மாட்டாள். ஆனால் முட்டாள்தனமாக, தன் கணவரைக் கொலை செய்வதன் மூலம் விதவையானாள். அவள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள். சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு அவரைக் கொலை செய்வதற்குப் பதிலாக, அவள் ஆலோசனையையோ அல்லது சட்ட உதவியையோ நாடியிருக்க வேண்டும்.
குடும்ப உடன்படிக்கை:
தேவன் ஆதாமிலிருந்து ஏவாளைப் படைத்தபோது குடும்ப அமைப்பை உருவாக்கினார். திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒரே மாம்சமாக மாறும் ஒரு புனித உடன்படிக்கை (ஆதியாகமம் 2:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கானாவூரில் நடந்த திருமணத்தில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றுவதன் மூலம் தனது முதல் அற்புதத்தைச் செய்தார் (யோவான் 2:1-11). கர்த்தர் தம் மணவாட்டியான திருச்சபையை தன்னலமற்றதாகவும் தியாகமாகவும் நேசிப்பது போல, ஒரு கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும், மற்ற பெண்களை அல்ல என்று வேதாகமம் கட்டளையிடுகிறது (எபேசியர் 5:25).
எச்சரிக்கை:
திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார் (எபிரெயர் 13:4). திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு பாலியல் உறவுகள் வைத்து வாழும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக எவரும் தேவனால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
திருமண உடன்படிக்கையின் புனிதத்தன்மையை நான் புரிந்துகொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran