ஏசாயா 12

1 அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்.

4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.

5 கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.

6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Related Topics/Devotions

பயப்படாதிருங்கள், கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் பெரிய காரிங்களைச் செய்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

நாளுக்குநாள் நலம்பெறுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. நாளுக்குநாள் வளருங்கள்&n Read more...

அறியுங்கள் அறிவியுங்கள் அறிக்கையிடுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தரை அறிந்திடுங்கள்< Read more...

Related Bible References

No related references found.