பலவீனம் மற்றும் வல்லமை

திறப்பு விழா அன்று ஒரு பாலம் இடிந்து விழுந்தது.  பாலத்தை திறந்து வைக்க வந்திருந்த சில பிரபலங்கள் காயம் அடைந்தனர்.  தொடர்ந்து நடந்த விசாரணையில் அஸ்திவார தூண்கள் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்பதும், எடையை தாங்க முடியாமல் பாலம் விழுந்ததும் தெரியவந்தது.  பொதுவாக, அதிகப்படியான சக்தி அல்லது எடை எதன் மீதாவது அல்லது எந்த நபரின் மீதாவது வரும்போது அந்த பலவீனமானது உடைகிறது அல்லது நசுக்கப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது.  இருப்பினும், மனிதர்களுடன் தேவன் இடைபடுவது ஆச்சரியமாக இருக்கிறது.  ஏனென்றால் பலவீனமான மனித பாத்திரங்கள் நசுக்கப்படுவதில்லை, மாறாக தேவன் அவர்களை பலப்படுத்தி தம் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்.

 பவுல்:
ஏதோ ஒரு விஷயம் பவுலைத் தொந்தரவு செய்தது.  அது ஒரு தடையாக அல்லது தன்னை தடுத்து நிறுத்துவதாக அல்லது கவனம் செலுத்துவதைத் தடுக்கிறதாக இருக்கிறது. ஆகையால் அந்த முள்ளை தன்னிடமிருந்து அகற்ற வேண்டும் என்று தேவனிடம் உருக்கமாக வேண்டினார்.  ஆனால், தேவன் வேறு ஒரு தீர்வைக் கொடுத்தார். அவரது பலவீனத்தை அகற்றுவதற்குப் பதிலாக, அவர் கிருபையின் மூலம் தம் வலிமையை அல்லது வல்லமையை வெளிப்படுத்துவார், அதனால் அவர் பற்றாக்குறை உள்ளவராகவோ அல்லது பயனற்றவராகவோ உணரமாட்டார் (2 கொரிந்தியர் 12:7-10). தேவ வல்லமை பவுலைப் போன்ற பலவீனமான மனித பாத்திரத்தை உடைக்காது, மாறாக, அவருடைய பலவீனம் அவருடைய கிருபையால் பலமாக அல்லது வல்லமையாக மாற்றப்படும்.  அவரது உடல் நிலை மாறாது, ஆனால் தேவ வல்லமை அவரை அழிக்காமல் அவரின் நோக்கத்தை நிறைவேற்ற அவரைப் பயன்படுத்தும்.

 மரியாள்:
 கன்னி மரியாளுக்கு பிரதான தூதனான காபிரியேல் கூறிய செய்தி முக்கியமானது.  ஒரு சாதாரண, எளிமையான மற்றும் அறியப்படாத பெண் அதை நம்பமுடியாததாகவும் சாத்தியமற்றதாகவும் கண்டாள்.  அதற்கு காபிரியேலின் பதில்; " பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்" (லூக்கா 1:35) என்பதாக இருந்தது. தேவனின் மாம்சமாகுதல் திட்டம் மரியாளை அழிக்கவில்லை, மாறாக அவளை ஒரு வாய்க்காலாக அல்லது கருவியாக தயார்படுத்தியது.

பரிசுத்த ஆவியின் ஆலயம்:
தேவன் மனிதர்களுடன் ஐக்கியம் கொள்ள விரும்புகிறார்.  தேவன் ஒவ்வொரு நாளும் ஆதாமையும் ஏவாளையும் சந்தித்தார் (ஆதியாகமம் 3:8). கீழ்ப்படியாமை மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் மீட்புக்கான தேவை இருந்தது, இது முதல் மனித ஜோடிக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாம்சமாகி சாதாரண மனிதர்களிடையே வாசம் பண்ணினார் (யோவான் 1:14). ஒருவர் கர்த்தராகிய இயேசுவை அழைக்கும்போது, ​​அந்த நபருக்குள் திரியேக தேவன் வந்து வாசம் செய்கிறார் (வெளிப்படுத்துதல் 3:20). நாம் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று பவுல் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 6:19).

என் சரீரம் தேவன் தங்கும் ஆலயமா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்