அபூரண திருமணங்களும் நேர்த்தியான முடிவும்

விவாகரத்துக்கான பொதுவான காரணங்கள் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது.  இந்தியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. உலகில் திருமணம் என்பது இரண்டு அபூரண மனிதர்களுக்கு இடையேயான உடன்படிக்கை. இருவரும் கடவுளுக்கும் ஒருவருக்கொருவரும் அர்ப்பணிப்புடன் இருந்தால், மகிழ்ச்சியான வாழ்வாக அது முடியும் (எபேசியர் 5:31-32; ஆதியாகமம் 2:22-25). இல்லையென்றால், பிரிந்து விவாகரத்து தான்.  விவாகரத்துக்கான சில காரணங்கள் பத்திரிக்கை செய்தி அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

பணம் முக்கியம்:  
நாற்பது சதவீத விவாகரத்துகள், பணத்தைக் கையாள்வதில் உள்ள தகராறால் நடக்கின்றன. யார் கையில் அதிகாரம்?  அதை எப்படி செலவிட வேண்டும்? அதன் முன்னுரிமைகள் என்ன? எல்லா ஆசீர்வாதங்களும் தேவனிடம் இருந்து வந்தவை என்பதையும், தேவனால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களின் பொறுப்பாளர்கள் என்பதையும் தெய்வ பக்தியுள்ள தம்பதிகள் புரிந்துகொள்கிறார்கள். எனவே, அவர்கள் ஜெபிக்கவும், தேவனின் சித்தத்தை அறிந்து கொள்ளவும், நிதிகளை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும் முடியும்.    

மரியாதை முக்கியம்:  
வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரையொருவர் மதிக்காதபோது, ​​அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை மதிக்கவில்லை என்றால், விவாகரத்துக்கு ஒரு விதை விதைக்கப்படுகிறது.   வாழ்க்கைத் துணையின் கருத்துக்கள், விருப்பங்கள் மற்றும் தெரிவுகளுக்கு மதிப்பளிப்பதும் முக்கியம்.   உண்மையாகவே, அன்பின் வெளிப்பாடாக, மரியாதை காட்டுவதில் வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரையொருவர் முந்திக் கொள்ள வேண்டும் (ரோமர் 12:10).

ஒப்பிட வேண்டாம்:  
இளம் தம்பதிகள் மற்ற ஜோடிகளை ஒப்பிட்டு தங்கள் குடும்ப வாழ்க்கை அந்த ஜோடிகளைப் போல சிறப்பாக இல்லை என்று கருதுகின்றனர்.  அது பிரபலங்கள், பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களாக கூட இருக்கலாம்.   அதற்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.  

மன்னிப்பதில் தாமதம்:  
கருத்து வேறுபாடு அல்லது வாக்குவாதம் ஏற்படும் போது, மன்னிப்பதும் மறப்பதும் அவசியம். அப்படி மன்னிக்காமல் இருக்கும் போது அது மனதில் வைத்துக் கொள்ளும் போது, அது கசப்பாகவும் வெறுப்பாகவும் மாறும், இது இணக்கமற்ற உறவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் கூட விவாகரத்தில் முடிகிறது.  சூரியன் மறையும் போது கோபம் தணிந்து விட வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (எபேசியர் 4:26-27). அப்படியானால் ஒரே நாளில் மன்னிப்பதும் மறப்பதும் நல்லது.  

மற்றவர்களின் குறுக்கீடு: 
தகராறு அல்லது வாக்குவாதம் ஏற்படும் போது, ​​பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்கள் உட்பட பிற நபர்களை தலையிட அனுமதிப்பது ஆபத்தானது.  

தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை:  
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய ரீதியாக, சரீர ரீதியாக, மன ரீதியாக, உணர்வு  ரீதியாக மற்றும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.   ஒரு துணையின் அலட்சியம் சாத்தானால் போடப்பட்ட ஒரு பொறியாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதை நான் புரிந்துகொள்கிறேனா?  

 Author: Rev. Dr. J .N. மனோகரன்