வீரர்களா அல்லது பார்வையாளர்களா

பார்வையாளர்களாக உட்கார அல்ல, மாறாக பந்தயத்தில் பங்கேற்க, மக்களை அரங்கத்திற்குள் வரும்படி தேவன் அழைக்கிறார். ஆம், நம்மைச் சுற்றி சாட்சிகளின் மேகமாக ஒரு பார்வையாளர்கள் கூட்டம் உள்ளது  (எபிரெயர் 12:1). தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட ஓட்டத்தை மற்றும் பாதையைத் திட்டமிட்டுள்ளார். 

1. குறுந்தூர ஓட்டம் (Sprint):
இது ஒரு குறுந்தூரப் பந்தயம்.  சுவிசேஷம், பிற தெய்வங்களைத் தொடர்வதால் வரவிருக்கும் தேவனுடைய கோபத்தையும் அதனால் உண்டாகும் துக்கத்தையும் தவிர்க்க மக்கள் உடனே ஓடிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது (மத்தேயு 3:7; சங்கீதம் 16:4). தூதன், லோத்தையும் அவன் குடும்பத்தையும், “உங்கள் ஜீவன் தப்ப ஓடுங்கள்” என்று கட்டளையிட்டான் (ஆதியாகமம் 19:17). அனைவரும் ஆண்டவரின் நாமத்தில் அடைக்கலம் புக அழைக்கப்படுகிறார்கள் (நீதிமொழிகள் 18:10). சீஷர்கள் சோதனையிலிருந்து, விக்கிரகாராதனையிலிருந்து, குறிப்பாக பாலியல் ஒழுக்கக் கேட்டிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் (கொலோசெயர் 3:5; 1 கொரிந்தியர் 10:14). யோசேப்பு, போத்திபாரின் மனைவியின் கவர்ச்சியிலிருந்து ஓடி தப்பித்தான் (ஆதியாகமம் 39:12).

2) தடைகள ஓட்டம் (Hurdle race):
இந்த ஓட்டத்தில், சமமான இடைவெளிகளில் தடைகள் இருக்கும். ஒரு ஓட்டப்பந்தய வீரன் அந்தத் தடைகளை முன்கூட்டியே அறிந்திருப்பதால், தன் நடைமுறையைத் திட்டமிட்டு ஓட முடியும். சாத்தான், விசுவாசிகள் நம்பிக்கையிழந்து, சந்தேகத்திலும் தோல்வியிலும் விழுந்துவிட வேண்டும் என்று, வழியில் சோதனைகளின் கிணறுகளையும் வெடிமரங்களையும் தோண்டி வைக்கிறான். பிற தடைகளாக விசுவாசமின்மை, பொய்யான உபதேசங்கள், கவலை, பயம், மனச்சிதறல் ஆகியவையாகும்.

3) நீண்டதூர ஓட்டம் (Marathon):
இது ஒரு நீண்ட தூர ஓட்டமாகும். பொறுமையுடன், நிலைத்த மனதுடன், கவனமாக ஓடுபவர்கள்தான் வெற்றியடைவார்கள். பவுலும் தன் ஓட்டத்தில் கவனம் செலுத்தினார் (பிலிப்பியர் 3:14). குழந்தைகளுக்கான கதையில் வரும் ஆமை மற்றும் முயல் ஓட்டத்தில், இறுதியில் ஆமைதான் வெற்றி பெறுகிறது. முயலுக்கு வெற்றிக்குத் தேவையான திறமையும், சக்தியும், சகிப்புத்தன்மையும் இருந்தபோதிலும், அது அகங்காரமும் அலட்சியமும் கொண்டிருந்தது. கர்த்தரை நம்பி காத்திருப்போருக்கே ஓட்டத்திற்குத் தேவையான வலிமையும் பலமும் வாக்குக் கொடுக்கப்பட்டுள்ளது (ஏசாயா 40:31).

4) கையளிப்பு ஓட்டம் (Relay Race):
விசுவாசிகள், தாம் ஓடும் ஓட்டத்தை முடிக்கும்போது ‘பேட்டன்’ (தடி) மற்றவர்களிடம் கொடுத்து தொடரச் செய்ய வேண்டும். அந்த ‘பேட்டன்’ என்பது சபைக்கு அளிக்கப்பட்ட சுவிசேஷமும் மிகப் பரிசுத்தமான விசுவாசமும் ஆகும் (யூதா 1:20). பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்கள்; எல்லா விசுவாசிகளும் புதிய சீஷர்களை உருவாக்கி அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்; தலைவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளுக்கே அல்லாமல், எழுந்துவரும் பிற தலைவர்களுக்குப் பின்பற்றச் செய்ய அவர்கள் கையளிக்கிறார்கள்.

5) வீணாக ஓடுகிறோமா? (Run in vain):
பவுல், கட்டுப்பாட்டின்மையால் தகுதி நீக்கப்படாமல் இருக்க விரும்பினார். அதற்காக, அவர் பொறுமையுடன், வெற்றியைப் பெறும் வகையில் ஓட வேண்டும் என்று எழுதினார் (1 கொரிந்தியர் 9:24-27).

நான் இலக்கை நோக்கி சீராக ஓடுகிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran