திருடர்கள், லக்னோவில் உள்ள மத்தியாரி பகுதியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுவரில் ஒரு துளை செய்து, உள்ளே நுழைந்து, பல பாதுகாப்புக் லாக்கர்களை உடைத்து, பணம், தங்கம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தனர் (டெக்கான் ஹெரால்ட், 23 டிசம்பர் 2024). பாதுகாப்புக் லாக்கர்கள் போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கவில்லை. உலகத்தில் உள்ள லாக்கர்கள் பயனற்றவை, ஏனெனில் புத்திசாலித்தனமான திருடர்கள் எப்போதும் அவற்றை உடைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். “உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத்தேயு 6:19-21).
இந்த உலகத்திற்கு அப்பால்:
ஒரு இறுதிச் சடங்கு வண்டியைத் தொடர்ந்து ஒரு லாரி நிறைய தங்கம், வெள்ளி, முத்து கற்கள் அல்லது பூமிக்குரிய உடைமைகள் வருவதை யாரும் பார்த்ததில்லை (யோபு 1:21-22). எகிப்திய பார்வோன்கள் தங்கம் மற்றும் பிற செல்வங்களுடன் அடக்கம் செய்யப்பட்டனர், ஆனால் அது திருடர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருந்தது.
அறுதிஇறுதி மதிப்பு இல்லை:
இந்த உலகச் செல்வத்திற்கு வாழ்க்கையை அர்ப்பணிப்பது பயனற்றது. பணமும் செல்வமும் இந்த பூமியில் இருக்கும் சில ஆண்டுகளுக்கு தான் முக்கியமானவை. ஆனால், மனிதன் இறந்து விட்டால், அவை ஒன்றுமே இல்லை.
மனநிறைவு:
ஒரு கிறிஸ்தவருக்கு முக்கியமான மதிப்பாக இருப்பது தெய்வீக நிறைவு அல்லது மனதிருப்தி கொண்ட ஆவிக்குரிய வாழ்வு ஆகும் (1 தீமோத்தேயு 6:6). ஒரு ஆய்வில் பெரும்பாலானோர், தங்களின் சம்பளம் இரட்டிப்பானால் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருள் (வீடு அல்லது வாகனம்) வாங்கினால் தான் தங்களுக்கு மனநிறைவு கிடைக்கும் என்று கூறினர்.
புதையல்கள்:
மனநிறைவு கொண்டவர்களே பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைப்பவர்கள். எப்படியோ மனித மனம் பொக்கிஷங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பூமியில் செல்வமும் பொக்கிஷங்களும் குவிக்கப்படும்போது, மனமும் பூமியிலுள்ள காரியங்களிலேயே லயிக்கிறது. ஆனால், ஒரு தெய்வீகமான நபர் தேவனின் சித்தத்தினை செயல்படுத்த, அவர் ராஜ்யத்தை விரிவுபடுத்த, அவர் நாமத்தில் நல்ல செயல்களைச் செய்ய கவனம் செலுத்துகிறார். தன்னை அறியாமலே, பரலோகத்தில் புதையல் சேர்த்து வருகிறார். இதனால், மனமும் தானாகவே தேவராஜ்யத்திற்கான செயலில் ஈடுபடுகிறது.
உண்மையான பொக்கிஷம்:
கிறிஸ்துவே உண்மையான பொக்கிஷம். அவர் தேவனின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார், எனவே பரலோகத்தில் உள்ளவற்றைப் பெறவே முயற்சி செய்ய வேண்டும் (கொலோசெயர் 3:1).
நான் தவறாமல், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran