கரை சேர்வோம் கரை சேர்ப்போம்

ஆதியில் ஏதேனில் ஒருவர்
ஆனார் இருவர் ஆண்டவர் செய்தது ஆபரேஷன்
ஆதாமிலிருந்து ஏவாள்
ஆதிக் குடும்பம் ஆரம்பம்

அனுதினமும் ஆண்டவர்
இறங்கிவந்தார் ஈந்தாரின்பமதை
உணவு ஊண் உறைவிடம்
எல்லாம் ஏதேனிலுண்டு
ஐம்பொறிகளையும் ஒடுக்காததால்
ஓங்கிற்று பாவம்
அதனால் மனுக்குலம் ஐயோ பாவம்

சாபமதை நீக்க வந்த எம்பெருமான்
பாவமற வாழ்ந்து மாண்டுயிர்த்தார்
பாவிகளை இரட்சிக்கும் வழிதிறந்தார்
ஆதிக் குடும்பம் பெற்ற பேரின்பம்
இன்றும் நாம் பெற்றிடவே
இன்ன்னலற வாழ்ந்திடவே

வாழ்க்கையெலாம் வளமாகி
அவர் வார்த்தை நம் பலமாகி
அனுதினமும் ஜெயம் சூடி
அவரன்பில் நாம் மூழ்கி
கரை சேர்வோம் கரை சேர்ப்போம்



Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download