சங்கீதம் 3:1-8

3:1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
3:2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)
3:3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
3:4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
3:5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
3:6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
3:7 கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
3:8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)




Related Topics


கர்த்தாவே , என் , சத்துருக்கள் , எவ்வளவாய்ப் , பெருகியிருக்கிறார்கள்! , எனக்கு , விரோதமாய் , எழும்புகிறவர்கள் , அநேகர் , சங்கீதம் 3:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 3 TAMIL BIBLE , சங்கீதம் 3 IN TAMIL , சங்கீதம் 3 1 IN TAMIL , சங்கீதம் 3 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 3 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 3 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 3 TAMIL BIBLE , PSALM 3 IN TAMIL , PSALM 3 1 IN TAMIL , PSALM 3 1 IN TAMIL BIBLE . PSALM 3 IN ENGLISH ,