மத்தேயு 27:3-10

27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
27:6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி,
27:7 ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
27:8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
27:9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
27:10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.




Related Topics



ஒரு அடிமையின் விலை-Rev. Dr. J .N. மனோகரன்

நற்செய்தியின் மதிப்பு இந்த உவமையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கற்பிக்கப்படுகிறது. "மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற...
Read More



அப்பொழுது , அவரைக் , காட்டிக்கொடுத்த , யூதாஸ் , அவர் , மரணாக்கினைக்குள்ளாகத் , தீர்க்கப்பட்டதைக் , கண்டு , மனஸ்தாபப்பட்டு , அந்த , முப்பது , வெள்ளிக்காசைப் , பிரதான , ஆசாரியத்திடத்திற்கும் , மூப்பரிடத்திற்கும் , திரும்பக் , கொண்டுவந்து: , மத்தேயு 27:3 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 27 TAMIL BIBLE , மத்தேயு 27 IN TAMIL , மத்தேயு 27 3 IN TAMIL , மத்தேயு 27 3 IN TAMIL BIBLE , மத்தேயு 27 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 27 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 27 TAMIL BIBLE , Matthew 27 IN TAMIL , Matthew 27 3 IN TAMIL , Matthew 27 3 IN TAMIL BIBLE . Matthew 27 IN ENGLISH ,