மத்தேயு 14:13-21

14:13 இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
14:14 இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
14:15 சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
14:16 இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார்.
14:17 அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
14:18 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
14:19 அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
14:20 எல்லாரும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
14:21 ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.




Related Topics



நன்றி மறப்பது நன்றன்று-Rev. Dr. J .N. மனோகரன்

மில்கா சிங் என்பவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  1958 இல் கார்டிஃபில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்...
Read More




உதவி பெற பணிவு-Rev. Dr. J .N. மனோகரன்

பலர் உதவி பெறுவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.  சிலர் மற்றவர்களின் உதவியைப் பெறுவதை விட சாவது மேல் என பிடிவாதமாக இருக்கிறார்கள்.  எந்த நபரும் ஒரு...
Read More




அன்பினால் நிறைந்த பைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

சமாரிடன் பர்ஸ் (Samaritan Purse) என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் தங்கள் ஷூ பெட்டிகளில் பரிசுகளை நிரப்பவும், அவற்றை சேகரித்து, உலகின்...
Read More




ஆண்டவர் தன் அருட்பணிக்கு வாங்கிய கடன்!-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனைத்து மனிதர்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்படி மாம்சமானார். அவருடைய பணிவு, எளிமையான வாழ்க்கை, தியாகம்...
Read More



இயேசு , அதைக்கேட்டு , அவ்விடம் , விட்டு , படவில் , ஏறி , வனாந்தரமான , ஒரு , இடத்துக்குப் , போனார் , ஜனங்கள் , அதைக் , கேள்விப்பட்டு , பட்டணங்களிலிருந்து , கால்நடையாய் , அவரிடத்திற்குப் , போனார்கள் , மத்தேயு 14:13 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 14 TAMIL BIBLE , மத்தேயு 14 IN TAMIL , மத்தேயு 14 13 IN TAMIL , மத்தேயு 14 13 IN TAMIL BIBLE , மத்தேயு 14 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 14 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 14 TAMIL BIBLE , Matthew 14 IN TAMIL , Matthew 14 13 IN TAMIL , Matthew 14 13 IN TAMIL BIBLE . Matthew 14 IN ENGLISH ,