மாற்கு 7:6-9

7:6 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்,
7:7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
7:8 நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார்.
7:9 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.




Related Topics



தேவ நாமத்தை வீணிலே வழங்காதீர்-Rev. Dr. J .N. மனோகரன்

கண் பார்வை இழந்த தன் தந்தை ஈசாக்குக்கு முன்பாக யாக்கோபு தன்னை ஏசாவாக காட்டிக்கொண்டான்.  ஈசாக்கு தனது மூத்த மகன் ஏசாவுக்குதான் ஆசீர்வாதங்களை...
Read More



அவர்களுக்கு , அவர் , பிரதியுத்தரமாக: , இந்த , ஜனங்கள் , தங்கள் , உதடுகளால் , என்னைக் , கனம்பண்ணுகிறார்கள்; , அவர்கள் , இருதயமோ , எனக்குத் , தூரமாய் , விலகியிருக்கிறது , என்றும் , , மாற்கு 7:6 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 7 TAMIL BIBLE , மாற்கு 7 IN TAMIL , மாற்கு 7 6 IN TAMIL , மாற்கு 7 6 IN TAMIL BIBLE , மாற்கு 7 IN ENGLISH , TAMIL BIBLE Mark 7 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 7 TAMIL BIBLE , Mark 7 IN TAMIL , Mark 7 6 IN TAMIL , Mark 7 6 IN TAMIL BIBLE . Mark 7 IN ENGLISH ,