மாற்கு 2:5-12

2:5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
2:6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
2:7 இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
2:8 அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?
2:9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி:
2:11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
2:12 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.




Related Topics


இயேசு , அவர்கள் , விசுவாசத்தைக் , கண்டு , திமிர்வாதக்காரனை , நோக்கி: , மகனே , உன் , பாவங்கள் , உனக்கு , மன்னிக்கப்பட்டது , என்றார் , மாற்கு 2:5 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 2 TAMIL BIBLE , மாற்கு 2 IN TAMIL , மாற்கு 2 5 IN TAMIL , மாற்கு 2 5 IN TAMIL BIBLE , மாற்கு 2 IN ENGLISH , TAMIL BIBLE Mark 2 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 2 TAMIL BIBLE , Mark 2 IN TAMIL , Mark 2 5 IN TAMIL , Mark 2 5 IN TAMIL BIBLE . Mark 2 IN ENGLISH ,