லூக்கா 22:54-62

22:54 அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.
22:55 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
22:56 அப்பொழுது, ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
22:57 அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
22:58 சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
22:59 ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
22:60 அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
22:61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
22:62 வெளியே போய், மனங்கசந்து அழுதான்.




Related Topics



மோசடியால் தோல்வி-Rev. Dr. J .N. மனோகரன்

நீதிபதி எட்வர்ட் டேவிலா தெரனோஸின் (சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனர் எலிசபெத் ஹோம்ஸிடம் இப்படியாக கூறினார்; “தோல்வி சாதாரணமானது.  ஆனால்...
Read More




தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்-Rev. Dr. J .N. மனோகரன்

"எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்" (மத்தேயு 6:13) என்பது ஆண்டவரின் ஜெபம். தேவனுடைய பிள்ளைகளை, சாத்தான்...
Read More



அவர்கள் , அவரைப் , பிடித்தபின்பு , பிரதான , ஆசாரியனுடைய , வீட்டில் , கொண்டுபோய் , விட்டார்கள் , பேதுருவும் , தூரத்திலே , பின்சென்றான் , லூக்கா 22:54 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 22 TAMIL BIBLE , லூக்கா 22 IN TAMIL , லூக்கா 22 54 IN TAMIL , லூக்கா 22 54 IN TAMIL BIBLE , லூக்கா 22 IN ENGLISH , TAMIL BIBLE Luke 22 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 22 TAMIL BIBLE , Luke 22 IN TAMIL , Luke 22 54 IN TAMIL , Luke 22 54 IN TAMIL BIBLE . Luke 22 IN ENGLISH ,