எரேமியா 30:12-17

30:12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.
30:13 உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களும் இல்லை.
30:14 உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
30:15 உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
30:16 ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
30:17 அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics



காயம் ஆற்றும் நேயம்-Rev. M. ARUL DOSS

  சங்கீதம் 147:3 இருதயம் நொருங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1. காயம் ஆற்றிய கர்த்தர் எரேமியா 34:1-24...
Read More



கர்த்தர் , சொல்லுகிறது , என்னவென்றால்; , உன் , புண் , ஆறாததாயும் , உன் , காயம் , கொடியதாயும் , இருக்கிறது , எரேமியா 30:12 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 30 TAMIL BIBLE , எரேமியா 30 IN TAMIL , எரேமியா 30 12 IN TAMIL , எரேமியா 30 12 IN TAMIL BIBLE , எரேமியா 30 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 30 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 30 TAMIL BIBLE , JEREMIAH 30 IN TAMIL , JEREMIAH 30 12 IN TAMIL , JEREMIAH 30 12 IN TAMIL BIBLE . JEREMIAH 30 IN ENGLISH ,