ஏசாயா 61:3-10

61:3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
61:4 அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க்கட்டுவார்கள்.
61:5 மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள்.
61:6 நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.
61:7 உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.
61:8 கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன், நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன்.
61:9 அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.
61:10 கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.




Related Topics



குடியுரிமை பிரச்சனைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ நிபுணர், அமெரிக்காவில் பிறந்தவர் குடியுரிமை பறிக்கப்பட்டது.  62 வயது முதியவர் ஒருவர் அமெரிக்காவில் பிறந்தவர்,...
Read More



சீயோனிலே , துயரப்பட்டவர்களைச் , சீர்ப்படுத்தவும் , அவர்களுக்குச் , சாம்பலுக்குப் , பதிலாகச் , சிங்காரத்தையும் , துயரத்துக்குப் , பதிலாக , ஆனந்த , தைலத்தையும் , ஒடுங்கின , ஆவிக்குப் , பதிலாகத் , துதியின் , உடையையும் , கொடுக்கவும் , அவர் , என்னை , அனுப்பினார்; , அவர்கள் , கர்த்தர் , தம்முடைய , மகிமைக்கென்று , நாட்டின , நீதியின் , விருட்சங்களென்னப்படுவார்கள் , ஏசாயா 61:3 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 61 TAMIL BIBLE , ஏசாயா 61 IN TAMIL , ஏசாயா 61 3 IN TAMIL , ஏசாயா 61 3 IN TAMIL BIBLE , ஏசாயா 61 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 61 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 61 TAMIL BIBLE , ISAIAH 61 IN TAMIL , ISAIAH 61 3 IN TAMIL , ISAIAH 61 3 IN TAMIL BIBLE . ISAIAH 61 IN ENGLISH ,