ஏசாயா 6:1-8

6:1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
6:2 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
6:3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
6:4 கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
6:5 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
6:6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து,
6:7 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
6:8 பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.




Related Topics



முப்பரிமாண தரிசனம்! -Rev. Dr. J .N. மனோகரன்

பல மால்கள் மற்றும் தியேட்டர்களில், முப்பரிமாண (3-D) திரைப்படங்கள் காட்டப்படுகின்றன.  பார்வையாளர்கள் பிரத்யேக கண்ணாடிகளை அணிந்துகொள்ளும் போது...
Read More



உசியா , ராஜா , மரணமடைந்த , வருஷத்தில் , ஆண்டவர் , உயரமும் , உன்னதமுமான , சிங்காசனத்தின்மேல் , வீற்றிருக்கக்கண்டேன்; , அவருடைய , வஸ்திரத்தொங்கலால் , தேவாலயம் , நிறைந்திருந்தது , ஏசாயா 6:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 6 TAMIL BIBLE , ஏசாயா 6 IN TAMIL , ஏசாயா 6 1 IN TAMIL , ஏசாயா 6 1 IN TAMIL BIBLE , ஏசாயா 6 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 6 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 6 TAMIL BIBLE , ISAIAH 6 IN TAMIL , ISAIAH 6 1 IN TAMIL , ISAIAH 6 1 IN TAMIL BIBLE . ISAIAH 6 IN ENGLISH ,