ஏசாயா 58:1-9

58:1 சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
58:2 தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
58:5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,
58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
58:8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
58:9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,




Related Topics



ஆக்ரோஷம் அல்லது வேடிக்கையான கோபம்-Rev. Dr. J .N. மனோகரன்

டிசம்பர் 20, 2021 அன்று , தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கன் தீவுக்கூட்டத்தில் உள்ள  ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாயில் ஒரு வெடிப்பு தொடங்கியது. இந்த...
Read More




பாரம்பரியங்களிலிருந்து வேதனை-Rev. Dr. J .N. மனோகரன்

பழங்காலத்திலிருந்தே பல மதங்களின் பண்டிகைகள் அதிக செலவுகளைக் கொண்டது.  அதிலும் வெண்ணெய், பால், தேன், பூக்கள் மற்றும் விலங்குகளின் பலியும்...
Read More



சத்தமிட்டுக் , கூப்பிடு; , அடக்கிக்கொள்ளாதே; , எக்காளத்தைப்போல , உன் , சத்தத்தை , உயர்த்தி , என் , ஜனத்துக்கு , அவர்கள் , மீறுதலையும் , யாக்கோபின் , வம்சத்தாருக்கு , அவர்கள் , பாவங்களையும் , தெரிவி , ஏசாயா 58:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 58 TAMIL BIBLE , ஏசாயா 58 IN TAMIL , ஏசாயா 58 1 IN TAMIL , ஏசாயா 58 1 IN TAMIL BIBLE , ஏசாயா 58 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 58 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 58 TAMIL BIBLE , ISAIAH 58 IN TAMIL , ISAIAH 58 1 IN TAMIL , ISAIAH 58 1 IN TAMIL BIBLE . ISAIAH 58 IN ENGLISH ,