ஓசியா 2:14-19

2:14 ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,
2:15 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, உன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
2:16 அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
2:17 பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச்சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.
2:18 அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.
2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.




Related Topics


ஆயினும் , இதோ , நான் , அவளுக்கு , நயங்காட்டி , அவளை , வனாந்தரத்தில் , அழைத்துக்கொண்டுபோய் , அவளோடே , பட்சமாய்ப் , பேசி , , ஓசியா 2:14 , ஓசியா , ஓசியா IN TAMIL BIBLE , ஓசியா IN TAMIL , ஓசியா 2 TAMIL BIBLE , ஓசியா 2 IN TAMIL , ஓசியா 2 14 IN TAMIL , ஓசியா 2 14 IN TAMIL BIBLE , ஓசியா 2 IN ENGLISH , TAMIL BIBLE HOSEA 2 , TAMIL BIBLE HOSEA , HOSEA IN TAMIL BIBLE , HOSEA IN TAMIL , HOSEA 2 TAMIL BIBLE , HOSEA 2 IN TAMIL , HOSEA 2 14 IN TAMIL , HOSEA 2 14 IN TAMIL BIBLE . HOSEA 2 IN ENGLISH ,