ஆகாய் 1:7-11

1:7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
1:8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1:9 அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
1:10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கெடாமலும் போயிற்று.
1:11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.




Related Topics


உங்கள் , வழிகளைச் , சிந்தித்துப் , பாருங்கள் , என்று , சேனைகளின் , கர்த்தர் , சொல்லுகிறார் , ஆகாய் 1:7 , ஆகாய் , ஆகாய் IN TAMIL BIBLE , ஆகாய் IN TAMIL , ஆகாய் 1 TAMIL BIBLE , ஆகாய் 1 IN TAMIL , ஆகாய் 1 7 IN TAMIL , ஆகாய் 1 7 IN TAMIL BIBLE , ஆகாய் 1 IN ENGLISH , TAMIL BIBLE Haggai 1 , TAMIL BIBLE Haggai , Haggai IN TAMIL BIBLE , Haggai IN TAMIL , Haggai 1 TAMIL BIBLE , Haggai 1 IN TAMIL , Haggai 1 7 IN TAMIL , Haggai 1 7 IN TAMIL BIBLE . Haggai 1 IN ENGLISH ,