யாத்திராகமம் 20:2-17

20:2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
20:5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
20:6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
20:8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
20:10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
20:13 கொலை செய்யாதிருப்பாயாக.
20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
20:15 களவு செய்யாதிருப்பாயாக.
20:16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.




Related Topics



அடக்குமுறை மற்றும் அநீதி-Rev. Dr. J .N. மனோகரன்

ஏழை ஒருவர் கற்பதற்கு ஆவல் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்கத்தில் இணைந்து பயின்றார். அப்படிப்பை அவர் சிரத்தையுடன் படித்து அங்கு...
Read More




மனிதகுலத்திற்கான வேதாகமம்-Rev. Dr. J .N. மனோகரன்

சமீப காலங்களில், பள்ளிகளில் வேதாகமம் படிக்கப்படுவதற்கு அல்லது கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.  வேதாகமம் ஒரு மத புத்தகம், அதை...
Read More



உன்னை , அடிமைத்தன , வீடாகிய , எகிப்து , தேசத்திலிருந்து , புறப்படப்பண்ணின , உன் , தேவனாகிய , கர்த்தர் , நானே , யாத்திராகமம் 20:2 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 20 TAMIL BIBLE , யாத்திராகமம் 20 IN TAMIL , யாத்திராகமம் 20 2 IN TAMIL , யாத்திராகமம் 20 2 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 20 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 20 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 20 TAMIL BIBLE , Exodus 20 IN TAMIL , Exodus 20 2 IN TAMIL , Exodus 20 2 IN TAMIL BIBLE . Exodus 20 IN ENGLISH ,