யாத்திராகமம் 18:14-22

18:14 ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.
18:15 அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
18:16 அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
18:17 அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
18:18 நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள் இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
18:20 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
18:21 ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
18:22 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.




Related Topics



எத்திரோ ஒரு சிறந்த மாமனார்-Rev. Dr. J .N. மனோகரன்

மீதியான் தேசத்தின் ஆசாரியனும் மோசேயின் மாமனாரான எத்திரோ, கேத்தூராள் மூலம் ஆபிரகாமின் வழித்தோன்றலாக இருக்கலாம் (ஆதியாகமம் 25:1-2). எனவே, எத்திரோ...
Read More



ஜனங்களுக்கு , அவன் , செய்த , யாவையும் , மோசேயின் , மாமன் , கண்டு: , நீர் , ஜனங்களுக்குச் , செய்கிற , இந்தக் , காரியம் , என்ன? , நீர் , ஒன்றியாய் , உட்கார்ந்திருக்கவும் , ஜனங்கள் , எல்லாரும் , காலமே , துவக்கிச் , சாயங்காலம்மட்டும் , உமக்கு , முன்பாக , நிற்கவும் , வேண்டியது , என்ன , என்றான் , யாத்திராகமம் 18:14 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 18 TAMIL BIBLE , யாத்திராகமம் 18 IN TAMIL , யாத்திராகமம் 18 14 IN TAMIL , யாத்திராகமம் 18 14 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 18 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 18 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 18 TAMIL BIBLE , Exodus 18 IN TAMIL , Exodus 18 14 IN TAMIL , Exodus 18 14 IN TAMIL BIBLE . Exodus 18 IN ENGLISH ,