யாத்திராகமம் 1:15-22

1:15 அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:
1:16 நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
1:17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
1:18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.
1:19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.
1:20 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.
1:21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.
1:22 அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.




Related Topics



குழந்தைகள் படுகொலை-Rev. Dr. J .N. மனோகரன்

குழந்தைகள் படுகொலை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு; பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகளை (மதிப்பீடு 6 முதல் 144000 வரை) கொன்று...
Read More



அதுவுமன்றி , எகிப்தின் , ராஜா , சிப்பிராள் , பூவாள் , என்னும் , பேருடைய , எபிரெய , மருத்துவச்சிகளோடே , பேசி: , யாத்திராகமம் 1:15 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 1 TAMIL BIBLE , யாத்திராகமம் 1 IN TAMIL , யாத்திராகமம் 1 15 IN TAMIL , யாத்திராகமம் 1 15 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 1 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 1 TAMIL BIBLE , Exodus 1 IN TAMIL , Exodus 1 15 IN TAMIL , Exodus 1 15 IN TAMIL BIBLE . Exodus 1 IN ENGLISH ,