எபேசியர் 2:13-22

2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
2:14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானகாரராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
2:17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
2:18 அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
2:21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
2:22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.




Related Topics



பகை வேண்டாம்-Rev. M. ARUL DOSS

நீதிமொழிகள் 10:12; 1பேதுரு 4:8 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும் (பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; அன்பு தனக்கிழைத்த தீங்கு...
Read More



முன்னே , தூரமாயிருந்த , நீங்கள் , இப்பொழுது , கிறிஸ்து , இயேசுவுக்குள் , கிறிஸ்துவின் , இரத்தத்தினாலே , சமீபமானீர்கள் , எபேசியர் 2:13 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 2 TAMIL BIBLE , எபேசியர் 2 IN TAMIL , எபேசியர் 2 13 IN TAMIL , எபேசியர் 2 13 IN TAMIL BIBLE , எபேசியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 2 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 2 TAMIL BIBLE , Ephesians 2 IN TAMIL , Ephesians 2 13 IN TAMIL , Ephesians 2 13 IN TAMIL BIBLE . Ephesians 2 IN ENGLISH ,