தானியேல் 3:23-26

3:23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
3:24 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
3:25 அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
3:26 அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.




Related Topics



நெருப்பிலிருந்து வரவழைக்கப்பட்டது -Rev. Dr. J .N. மனோகரன்

நெருப்பை சந்திக்கும் எவரும் வலியை அனுபவிப்பார்கள், அதைத் தவிர்ப்பார்கள்.   இருப்பினும், மூன்று பேர் ஒரு 'அக்கினி பூங்கா' மத்தியில் நடந்து...
Read More



சாத்ராக் , மேஷாக் , ஆபேத்நேகோ , என்னும் , அந்த , மூன்று , புருஷரும் , கட்டுண்டவர்களாய் , எரிகிற , அக்கினிச்சூளையின் , நடுவிலே , விழுந்தார்கள் , தானியேல் 3:23 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 3 TAMIL BIBLE , தானியேல் 3 IN TAMIL , தானியேல் 3 23 IN TAMIL , தானியேல் 3 23 IN TAMIL BIBLE , தானியேல் 3 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 3 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 3 TAMIL BIBLE , DANIEL 3 IN TAMIL , DANIEL 3 23 IN TAMIL , DANIEL 3 23 IN TAMIL BIBLE . DANIEL 3 IN ENGLISH ,