அப்போஸ்தலருடையநடபடிகள் 4:31-37

4:31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.
4:32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
4:35 அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
4:36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
4:37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.




Related Topics



நீங்கள் தைரியமாயிருங்கள்-Rev. M. ARUL DOSS

2நாளாகமம் 32:7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்;...
Read More



அவர்கள் , ஜெபம்பண்ணினபோது , அவர்கள் , கூடியிருந்த , இடம் , அசைந்தது , அவர்களெல்லாரும் , பரிசுத்த , ஆவியினால் , நிரப்பப்பட்டு , தேவவசனத்தைத் , தைரிமாய்ச் , சொன்னார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 4:31 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 4 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 4 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 4 31 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 4 31 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 4 IN ENGLISH , TAMIL BIBLE Acts 4 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 4 TAMIL BIBLE , Acts 4 IN TAMIL , Acts 4 31 IN TAMIL , Acts 4 31 IN TAMIL BIBLE . Acts 4 IN ENGLISH ,