அப்போஸ்தலருடையநடபடிகள் 19:35-42

19:35 பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
19:36 இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும்.
19:37 இந்த மனுஷரை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.
19:38 தெமத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
19:39 நீங்கள் வேறெ யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும்.
19:40 இன்றைக்கு உண்டான உலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போம் என்று சொல்லி,
19:41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.




Related Topics



எபேசின் கலவரம்-Rev. Dr. J .N. மனோகரன்

சுவிசேஷத்தின் எளிய பிரசங்கம் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் எபேசு பட்டணத்தில் வல்லமையான எதிர் நீரோட்டங்களை உருவாக்கியது. 1) திறன்னு...
Read More



பட்டணத்துச் , சம்பிரதியானவன் , ஜனங்களை , அமர்த்தி , எபேசியரே , எபேசியருடைய , பட்டணம் , மகா , தேவியாகிய , தியானாளுக்கும் , வானத்திலிருந்து , விழுந்த , சிலைக்கும் , கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை , அறியாதவன் , உண்டோ? , அப்போஸ்தலருடையநடபடிகள் 19:35 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 35 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 35 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 IN ENGLISH , TAMIL BIBLE Acts 19 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 19 TAMIL BIBLE , Acts 19 IN TAMIL , Acts 19 35 IN TAMIL , Acts 19 35 IN TAMIL BIBLE . Acts 19 IN ENGLISH ,