2சாமுவேல் 5:6-12

5:6 தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான் அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
5:7 ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
5:8 எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
5:9 அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலுமிருக்கிற மதிலைக் கட்டினான்.
5:10 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
5:11 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
5:12 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,




Related Topics


தேசத்திலே , குடியிருக்கிற , எபூசியர்மேல் , யுத்தம்பண்ண , ராஜாவானவன் , தன் , மனுஷரோடேகூட , எருசலேமுக்குப் , போனான் , அவர்கள்: , இதிலே , பிரவேசிக்க , தாவீதினால் , கூடாது , என்று , எண்ணி , தாவீதை , நோக்கி: , நீ , இதற்குள் , பிரவேசிப்பதில்லை; , குருடரும் , சப்பாணிகளும் , உன்னைத் , தடுப்பார்கள் , என்று , சொன்னார்கள் , 2சாமுவேல் 5:6 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 5 TAMIL BIBLE , 2சாமுவேல் 5 IN TAMIL , 2சாமுவேல் 5 6 IN TAMIL , 2சாமுவேல் 5 6 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 5 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 5 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 5 TAMIL BIBLE , 2SAMUEL 5 IN TAMIL , 2SAMUEL 5 6 IN TAMIL , 2SAMUEL 5 6 IN TAMIL BIBLE . 2SAMUEL 5 IN ENGLISH ,